Sunday 5 May 2013

வைரவர் வழிபாட்டு விரத நாள்கள்


வைரவர் வழிபாட்டு விரத நாள்கள் மூன்று. அவை வருமாறு:- 

1. செவ்வாய்க்கிழமை விரதம்: தை மாதம், முதல் செவ்வாய்க்கிழமையன்று தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அப்போது பகலில் ஒரு பொழுது உண்ணலாம். மற்ற நேரங்களில் தண்ணீர் மட்டும் அருந்தி கொள்ளலாம். அப்படி இருக்க முடியாதவர்கள் அன்றைய தினம் முழுவதும் பால், பழம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம். 

2. சித்திரை பரணி விரதம்: சித்திரை மாதப் பரணி நாளன்று வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அன்று பகலில் ஒரு பொழுது உண்ணலாம். 

3. ஐப்பசி பரணி விரதம்: ஐப்பசி மாதப் நாளன்று வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அன்று இரவில் மட்டும் உண்ணலாம். இல்லையென்றால் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருக்கலாம். இந்த விரதங்களை முறைப்படி கடைப்பிடித்து வந்தால் நல் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கி அனைத்து விதமாக சந்தோஷங்களும் கிடைக்கும்.

No comments:

Post a Comment