Friday 3 May 2013

அமாவாசையில் குழந்தை பிறக்கக்கூடாது என கூறுவது ஏன்?

திங்கட் கிழமையன்று வரும் அமாவாசை நாளில் புத்திர பாக்யம் வேண்டுபவர்கள் காலை 6லிருந்து 11 மணிக்குள் அரச மரத்தை சுற்றி வந்து வழிபட   வேண்டும். மேலும், அமாவாசை திதியும் அடுத்த பிரதமை திதியும் இணைந்திருக்கக்கூடிய நாளில் ‘ஸிதபட்ச அமாவாஸ்யா’ என்று விவசாயிகள் பயிரி டவும்,  புதுகாரியம் தொடங்கவும் சிறந்த நாளாக சாஸ்திரம் கூறுகிறது. ‘‘அமாவாஸ்யா ஸுபகா ஸுசேவா’’ என வேதமும் மங்களநாள் இதுதான் என்கிறது.  தெய்வங்களை வழிபட உகந்தது என அமாவாசையை சாஸ்திரம்  கூறுகிறது. 

நல்லடக்கம் செய்யப்பட்டவர்களுக்கும் பித்ருக்களுக்கும் தர்ப்பணம், திதி கொடுப்பதை இந்த நாளில்தான் செய்ய வேண்டும். அமாவாசையில் பிறந்த குழந்தைக்கு  சாந்தி செய்ய வேண்டும். இல்லையெனில் வாழ்வினில் தவறான வழியை அந்தக் குழந்தை பின்பற்றக்கூடும் என ‘சாந்தி குஸுமாகரம்’ என்ற நூல் கூறுகின்றது.  பிறப்பதை நாம் தடுக்க முடியாதே! ஆனால், பரிகாரம் செய்து நல்வாழ்வு வாழ முடியுமே! நாம் அனுபவிக்கும்  சுகத்தில் சாஸ்திர விரோதமான காரியங்களை  விலக்க வேண்டும் ‘‘பவஸுகே தோஷ: அனுசிந்தியதாம்’’ என ஆதிசங்கரர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment