Thursday 9 May 2013

ஸ்ரீ சிவன் ஆலயம், லாங்ஹார்ன், பென்சைல்வேனியா

ஆலய குறிப்பு : பென்சைல்வேனியாவின் லாங்ஹார்ன் பகுதியில் உள்ள ஸ்ரீ சிவன் ஆலயம் கேதர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சின்மயா மிஷனால் ஏற்படுத்தப்பட்ட இவ்வலயம் 1992 ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டதாகும். 

சாதாரண சிவன் கோயில்களை போல் அல்லாது முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் சிவ பெருமான் இக்கோயிலில் காட்சி தருகிறார். தியானநிலையில் அமர்ந்த வடிவில் கேதரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் அனைத்து இந்து திருவிழாக்களும் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி முக்கிய தினங்களில் சிறப்பு பூஜைகளுடன் தியான வகுப்புக்களும் நடத்தப்படுகிறது.

அருள்மிகு சிவன் ஆலயம், லாஸ் ஏஞ்சல்ஸ்

ஆலய குறிப்பு : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் சின்மயா மிஷனால் நிறுவப்பட்டுள்ள சிவன் ஆலயம், இப்பகுதியில் புகழ்பெற்றதாக திகழ்கிறது. உணர்வு ரீதியாக ஆன்மிகம் மற்றும் ஞான உணர்வுகளை ஏற்படுத்துவதால் இவ்வாலயம் லாஸ் ஏஞ்சல்சின் காசி என்றே அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தில் உள்ள சிவ லிங்கத்திற்கு 1997ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி சுவாமி சிதானந்தாவால் கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.

1997ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி சுவாமி தேஜோமயானந்தாவால் இவ்வாலயத்தில் சிவ பெருமானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவ்வாலயத்தில் தினசரி பூஜைகள், கலாச்சார, ஆன்மிக மற்றும் கல்வியியல் நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. சிவராத்திரி விழா இவ்வாலயத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி வழிபாடு நடத்துவர். 

ஸ்ரீ சிவன் ஆலயம், பிளோரிடா


ஆலய குறிப்பு : பிளோரிடாவில் உள்ள ஆர்லண்டோ பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சிவன் ஆலயம், சின்மயா மிஷனால் அமைக்கப்பட்டதாகும். இவ்வாலயம் இப்பகுதி மக்களால் தபோவனம் என்று அழைக்கப்படுகிறது. 1999ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி திறக்கப்பட்ட இவ்வாலயம் மும்பையில் உள்ள சந்தீபனி சாதனாலயத்தை போன்று அமைந்துள்ளது. பின்னர் இக்கோயிலில் ஸ்ரீ ஜகதீஸ்வரர் என்ற பெயரில் சிவ பெருமானின் சிலை நிறுவப்பட்டது. கைவல்யா என பெயரிடப்பட்டுள்ள இம்மையத்தில் மூர்த்தி ஸ்தாபனம் மற்றும் பிரண பிரதிஷ்டை சுவாமி தேஜோமயானந்தாவால் மேற்கொள்ளப்பட்டது.


முகவரி : Chinmaya Mission Orlando,
Kaivalya, 1221 Florida Road,

Casselberry, Florida 32707,

USA

தொலைப்பேசி : +1-407-699 7331
இணையதளம் : http://www.chinmayaorlando.org/

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயம், தாலாஸ்,டெக்சாஸ்


ஆலய வரலாறு : ஷீரடி சாய்பாபாவின் சர்வ தர்ம வழிபாட்டை போதிக்கும் விதமாக அமைக்கப்பட்டதே டெக்சாஸ் மாகாணத்தின் தாலாஸ் பகுதியில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயம் ஆகும். 2004ம் ஆண்டு நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் டெக்சாஸ் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயம் திறக்கப்பட்டது. கணேச பூஜையுடன் துவங்கிய இந்த ஆலய துவக்க விழாவில் பிரண பிரதிஷ்டம், கணபதி ஹோமம், சாய் காயத்ரி ஹோமம் உள்ளிட்ட ஸ்ரீ சாய்பாபா பூஜைகளுடன் நடைபெற்றது. இவ்விழாவில் நூற்றுக்கணக்கான சாய் பக்தர்கள் கலந்து கொண்டனர். 

இஸ்லாமியர்களின் வழிபாட்டு கூடத்திற்கு அருகே தேவாலயமும் அதற்கு அடுத்த கட்டிடமாக சர்வ தர்ம கொள்கைகளை கற்பிக்கும் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயமும் அமைந்துள்ளது இவ்வாலயத்தின் கூடுதல் தனிச் சிறப்பாகும். மேலும் துவராகாமயி என்றழைப்படும் சாய்பாபா ஆலயம் தற்போது அமைந்துள்ள இடம் முன்னதாக மசூதியாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. லாப நோக்கமற்ற அமைப்பாக செயல்பட்டு வரும் இவ்வாலயத்தில் யோகா, பஜனை உள்ளிட்ட வகுப்புக்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாலயத்தில் அனைத்து இந்து பண்டிகைகளும், விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆலய முகவரி : Sri Shirdi Sai Baba Temple of DFW,
P.O.Box 797354, Dallas, TX 75379-7354
தொலைப்பேசி : (469)467-3388
இமெயில் : maildrop@shirdisaidallas.org
இணையதளம் : http://www.shirdisaidallas.org/index.php

ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி ஆலயம், டெக்சாஸ்


ஆலய வரலாறு : வேத பாரம்பரியத்தை வளர்ப்பதற்காக ஸ்ரீ திரிதந்தி சின்ன ஸ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகளால் டெக்சாசின் ஹோஸ்டன் நகரில் ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி ஆலயம் 2008ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இவ்வாலயம் பஞ்சரத்ராகம முறையின்படி அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. வழிபாட்டு தலமாக விளங்கும் அஷ்டலக்ஷ்மி ஆலயத்தில் லக்ஷ்மி நாராயணர் உடன் லக்ஷ்மி தேவி, மகாலட்சுமி,தனலட்சுமி, தான்ய லட்சுமி,ராஜ்ய லட்சும், சந்தான லட்சுமி, ஜெய லட்சுமி, வீர லட்சுமி, தனலட்சுமி ஆகிய 8 வடிவங்களில் காட்சி அளிக்கிறாள். இவ்வாலயம் வழிபாட்டு தலமாக மட்டுமின்றி பண்டைய பாரம்பரிய வேத முறைகள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் இடமாகவும் விளங்குகிறது.

ஆலய அமைப்பு : அஷ்டலக்ஷ்மி ஆலயம், கலாச்சார அரங்குடன் சேர்த்து 3600 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மைய அரங்கு சுமார் 300 பேர் வரை அமரும் திறன் கொண்டதாகும். இவ்வாலயத்தில் மத, சமூக மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 

ஆலய நேரம் : காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது. 

ஆலய முகவரி : Sri Ashtalakshmi Temple(JET USA Houston Chapter), 
10098 Synott Rd, Sugar Land, TX 77498. 
தொலைப்பேசி : (281) 498-2344
இமெயில் : alt@jetusahouston.org
இணையதளம் : http://www.ashtalakshmi.org

ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி சமேத வெங்கடேஷ்வர சுவாமி ஆலயம், லாஸ்ஏஞ்சல்ஸ்


ஆலய குறிப்பு : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி சமேத வெங்கடேஷ்வர சுவாமி ஆலயம். இவ்வாலயத்தில் எட்டு தேவியர்களுடன் வெங்கடேஷப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.லாப நோக்கமற்ற அமைப்பாக செயல்பட்டு வரும் இவ்வாலயத்தில் புத்தாண்டு, சிவராத்திரி, பிரம்மோற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ராமநவமி உள்ளிட்ட அனைத்து இந்துப் பண்டிகைகளும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

ஆலய முகவரி : Sri Ashtalakshmi Sametha Venkateswara Swamy Temple,
8130, Laurel Canyon BLVD.North Hollywood, CA-91605.

தொலைப்பேசி : (818) 827-7927

இமெயில் : contact@ashtalakshmitemplela.org

இணையதளம் : www.ashtalakshmitemplela.org

இந்துக் கோயில், மின்னசொட்டா


ஆலய வரலாறு : மின்னசொட்டா பகுதியில் வழிபாட்டிற்காக இந்து ஆலயம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதியில் வாழ்ந்தவர்களின் நீண்ட நாள் எண்ணமாக இருந்து வந்தது. 1970 களில் மின்னசொட்டா வாழ் இந்து குடும்பங்கள் வழிபாட்டின் மூலம் தங்களை ஒன்றிணைத்து கொள்ளவும், குழந்தைகளுக்கு மதம் மற்றும் கலாச்சாரத்தை தற்று தரும் இடம் தேவை முடிவு செய்து இவ்வாலயத்தை அமைத்தனர். 1979ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதியன்று சுமார் 10 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து இக்கோயிலை அமைத்தனர். இக்கோயிலில் ஸ்ரீ ராம பரிவார், ஸ்ரீ கணேசர், ஸ்ரீ கிருஷ்ணர், சரஸ்வரதி, லட்சுமி, மகாதேவர் உள்ளிட்ட திருவுருவப் படங்கள் நிறுவப்பட்டு இக்கோயில் திறப்பு விழா கண்டது. 


அவ்வாண்டு இறுதியில் பகவத் கீதை வகுப்புக்கள் துவங்கப்பட்டது. 1983ம் ஆண்டு முதன் முதலில் கணேசர் சிலை இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிறிய ஆலயமாக துவங்கப்பட்ட இவ்வாலயம் மெல்ல மெல்ல விரிவுபடுத்தப்பட்டு, தீபாவளி, ஹோலி உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளும் கொண்டாடப்பட்டது. 1999ம் ஆண்டு புதிய ஆலயம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது. 2001ம் ஆண்டு விஷ்ணுவிற்கு சுதர்சன ஹோமமும், 2002ல் சீதா ராமர் கல்யாணமும், 2003 ல் கிருஷ்ண மகோற்சவமும் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 2006ம் ஆண்டு ஜூலை 2ம் தேதியன்று இவ்வாலயத்தின் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்று முதல் நாள்‌தோறும் பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. 2007ம் ஆண்டு ராம பரிவாரங்கள், ராதா-கிருஷ்ணர், மீனாட்சி, சிவன், சுப்ரமணியர், பாலாஜி, ஐயப்பன், சத்யநாராயணர், நவகிரகங்கள் உள்ளிட்ட தெய்வ சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

ஆலய முகவரி : Hindu Society of Minnesota
10530 Troy Lane North
Maple Grove, MN 55311

இணையதளம் : https://www.hindumandirmn.org/

நியூ மெக்சிகோ இந்து ஆலயம்


ஆலய குறிப்பு : அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பகுதியில் இயற்கை சூழ்ந்த பகுதியில் அமைந்த இந்த அழகிய இந்து ஆலயம். லாப நோக்கமற்ற அமைப்பாக பதிவு செய்யப்பட்டுள்ள இவ்வாலயம், இந்து கலாச்சார, ஆன்மீக பணிகள் ஆற்றுவது மற்றும் அதனை பரப்புவது, ஆன்மிக பணிகள் குறித்து ஆலோசனை செய்யும் மையமாகவும் விளங்கி வருகிறது. இவ்வாலயத்தில் ஆன்மீக பூஜைகளும், பஜனைகளும், அனைத்து இந்துக்களின் விழாக்களின் கொண்டாட்டங்களும் நடைபெற்று வருகிறது.

ஆலய முகவரி : Hindu Temple, 
8418 Zuni SE (SW corner of Zuni & Utah) 
Albuquerque, NM 87108

இணையதளம் : http://htsnm.org/

டுலிடோ இந்துக் கோயில்


ஆலய வரலாறு : ஒஹிஒ மாகாணத்தின் புகழ்பெற்ற நகரமான டுலிடோ பகுதி இந்த இந்து‌க்கோயில் அமைந்துள்ளது. 1982ம் ஆண்டு இக்கோயில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1989ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதிதாக நிலம் பெறப்பட்டு நிரந்தரமான கட்டிடத்தில் இக்கோயில் அமைக்கப்பட்டது. இக்கோயில் இந்து மதம், கலாச்சாரம் மற்றும் ஆன்மிக செயல்பாடுகள் நடைபெறும் இடமாக திகழ்கிறது. இப்பகுதியில் வாழும் 400 இந்து குடும்பத்தினர்களும், டுலிடோ பல்கலைகழகத்தில் படிக்கும் சுமார் 300 இந்திய மாணவர்களும் இக்கோயிலில் நடைபெறும் வைபவங்களில் தவறாது கலந்து கொள்கின்றனர். இக்கோயிலில் வழிபாடுகள், ஆன்மிக சொற்பொழிவுகள், மதம் சார்ந்த கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இக்கோயிலில் தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட அனைத்து இந்து மற்றும் இந்திய பண்டிகைகள் தவறாது கொண்டாடப்படுகின்றன. இந்து பாரம்பரியம் மற்றும் ஆன்மிக கொள்கைகளை விளக்கும் வகுப்புக்களும், திருமண வைபவங்களும் நடத்தப்படுகிறது.

ஆலய நேரம் : செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரை நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணிவரை ஆலயம் திறந்துள்ளது. திங்கள் கிழமைகளில் கோயில் அடைக்கப்பட்டுள்ளது. 

ஆலய முகவரி : Hindu Temple of Toledo,
4336 King Road, Sylvania, OH 43560
தொலைப்பேசி : 419 843 4440
இமெயில் : hindutempletoledo@gmail.com
இணையதளம் : http://www.hindutempleoftoledo.org

ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயம், பிராம்ப்டன், கனடா


ஆலய குறிப்பு :

 கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் கேரள கட்டிடகலையில் அமைக்கப்பட்டு வருகிறது, ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயம். தாங்கள் வசிக்கும் பகுதியில் குருவாயூரப்பனை எழுந்தருளச் செய்து வணங்க வேண்டும் என்ற இப்பகுதி பக்தர்களின் கனவுகளை நிஜமாக்கும் விதமாக இவ்வாலயம் அமைக்கப்பட்டு வருகிறது. ஏராளமான பக்தர்களும், தன்னார்வர்களும் தங்களை இந்த ஆலயம் அமைக்கும் இறைப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இந்து சிற்ப முறைப்படியும், ஆகம சாஸ்திர முறைப்படியும் அமைக்கப்பட்டு வரும் இக்கோயிலில் குருவாயூரப்பன், கணபதி, சாஸ்தா, தேவி உள்ளிட்ட தெய்வங்களை பிரதிஷ்டை செய்ய தி்ட்டமிடப்பட்டுள்ளது. 

ஆலய முகவரி : Guruvayurappan Temple of Brampton,
125 Father Tobin Rd Brampton, ON L6R 3K2
தொலைப்பேசி : 905-799-0900

இமெயில் : gtbrampton@yahoo.ca

இணையதளம் : http://guruvayur.ca/

Tuesday 7 May 2013

கவுதமர்


ஆங்கிரஸ் மகரிஷியின் வம்சத்தில் தோன்றிய மகரிஷிகளில் கவுதமர் மிக முக்கியமானவர். இவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும் இடம்பெற்றிருக்கிறார். தீர்க்கதமஸ் என்னும் மகரிஷிக்கும், ப்ரத்வேஷீ என்னும் பெண்மணிக்கும் பிறந்தவர் இவர். தீர்க்கதமஸ் பிறவியிலேயே பார்வையற்றவர். பிருகஸ்பதியின் சாபத்தால் கருவிலேயே இவருடைய கண்கள் குருடாயின. மேதையான இவருக்கு சகலவேதங்களிலும் நல்ல ஞானம் இருந்தது. பார்வையற்றவராக இருந்ததால், தீர்க்கதமஸை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை. நீண்டகாலமாக பிரம்மசரியாகவே இருந்தார்.

 ப்ரத்வேஷீ தான் அவருடைய வேதஅறிவைக் கண்டு அவரைத் திருமணம் செய்ய சம்மதித்தாள். இவ்விருவருக்கும் பிறந்த முதல் குழந்தை தான் கவுதமர். தொடர்ந்து பல குழந்தைகளைப் பெற்றாள் ப்ரத்வேஷீ. எப்போதும் வயிற்றில் பிள்ளையைச் சுமந்து இருப்பதை எண்ணி ப்ரத்வேஷீக்கு வெறுப்பு உண்டானது. இதனால், கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எலியும் பூனையும் போல குடும்பத்தில் சண்டை சச்சரவிற்கு பஞ்சமே இல்லாமல் போனது.

 ப்ரத்வேஷீ, தன் கணவன் தீர்க்கதமஸை  திட்டத் துவங்கிவிட்டாள். கவுதமர் அம்மா பிள்ளையாக வளர்ந்திருந்தால் ப்ரத்வேஷீயின் பக்கம் துணைநின்றார். ஒருநாள் ப்ரத்வேஷீ கவுதமரிடம், இந்த கிழத்திற்கு சோற்றை தின்பதும், வருஷம் தவறாமல் என்னைப் பிள்ளைத்தாய்ச்சியாக்குவதும் தான் ஒரே வேலை. அவர் உயிரோடு இருந்தால் இனியும் எனக்கு சங்கடம்! பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு! இனி கங்கையாற்றில் அவரை தூக்கி போட்டு விடுவது ஒன்றுதான் சரியான தீர்வு! என்றாள் அடங்காத கோபத்துடன். மனைவியை பிள்ளை பெறும் இயந்திரமாக பார்க்கும் கணவன் மீது எந்தப் பெண்ணும் வெறுப்பு கொள்ளத்தான் செய்வாள். அதைத் தான் ப்ரத்வேஷீயும் செய்தாள். அதனால் தான் அவள் பெயரிலேயே துவேஷத்தையும் சேர்த்து வைத்து விட்டார்கள் போலும். வெறுப்பு அளவுகடந்துவிட்டதால், பிரம்மஹத்தி தோஷத்தையே (கொலை பாவம்) தரும் பாவத்தையும் செய்ய முனைந்துவிட்டாள். மரக்கட்டைகளால் ஆன தெப்பம் ஒன்றைச் செய்து அதில் தீர்க்கதமஸை ஏற்றச் செய்தாள். 

அம்மாவின் பேச்சைக் கேட்ட கவுதமரும் பலாத்காரமாக தந்தையை தெப்பத்தில் அமர்த்தி கங்கையாற்றில் விட்டுவிட்டார். ஆற்றில் இருக்கும் திமிங்கலம், முதலைகளுக்கு இரையாகிவிடுவர்.கவுதம மகரிஷியின் தர்மபத்தினி அகல்யா உலகப் பிரசித்தமானவள். ராமாயணம் படித்த அனைவருக்கும் நன்கு அறிமுகமான பாத்திரம். பாலகாண்டத்திலேயே விஸ்வாமித்திரரோடு ராமலட்சுமணர்கள் செல்லும்போது கவுதம மகரிஷியின் ஆஸ்ரமம் வழியாகத் தான் சென்றார்கள். ராமன் விஸ்வாமித்திர ரிஷியிடம் கவுதமரின் ஆஸ்ரமம் ஏன் இப்படி பாழடைந்து கிடக்கிறது என்று கேட்க நடந்த கதையை அவர் ராமனுக்கு எடுத்துச்சொன்னார்.

ராமா! கவுதமரும் அகல்யாவும் தம்பதிகளாக வாழ்ந்த ஆஸ்ரமம் இது! அகல்யா அழகுள்ள பெண். அவளது அழகில் மயங்கிய இந்திரன் ஆசைகொண்டு பூலோகம் வந்தான். கவுதமர் அனுஷ்டானம் செய்ய அதிகாலையில் கிளம்பிய வேளையில் ஆயத்தமானான் இந்திரன். கவுதமரைப் போலவே வேடம் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். அகல்யாவும் விபரீதம் அறியாது கணவனைப் போல இருந்த இந்திரனுடன் மகிழ்ந்திருந் தாள். தன் மனைவி அகல்யாவும், இந்திரனும் செய்த செயலை நொடிப்பொழுதில் உணர்ந்தார் கவுதமர். வெகுண்டு இந்திரன் மீது கடும்சாபம் இட்டார். இந்திரனின் உடம்பு அருவருக்கத்தக்க நிலைக்கு ஆளாகும்படி சபித்தார். பின்னரும் சினம் அடங்கவில்லை. தன் மனைவி மீதும் மின்னலாய் பாய்ந்தது அவரின் கோபம். கணவனின் ஸ்பரிசத்துக்கும், பிறரது ஸ்பரிசத்துக்கும் வேறுபாடு காணமுடியாத அவளை, நீண்டகாலம் பசி தாகத்தால் மானிடதன்மை இழந்து பேயுருக்கொண்டு அலையும்படியும் சபித்தார்.

 அத்தோடு விட்டாரா என்ன? இறுதியில் கல்லாய் சமைந்து கேட்பாரற்றுக் கிடக்கும் படியும் செய்தார். சாபவிமோசனமாக பரம்பொருளாகிய உனது பாதத்தூளிகள் (தூசு) பட்டு பெண்ணாக சுயவுருவம் பெறும்படி அருள்செய்தார், என்றார் விஸ்வாமித்திரர். தங்கள் தவ வலிமையினால் முக்காலத்தையும் உணர்ந்தவர்கள் ஞானிகள். ராமாவதாரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த சரபங்கர், சபரீ போல, கவுதமரும் காத்திருந்தார். மிதிலாபுரியில் ஜனகமன்னனிடம் அரண்மனை புரோகிதராக இருந்த சதானந்தர், கவுதமருககும் அகல்யாவுக்கும் பிறந்த புத்திரர் ஆவார். ராமாயணம் மட்டுமில்லாமல் அகல்யை சாபம் மகாபாரதம், வேதம் ஆகிய எல்லாவற்றிலும் இடம் பெற்றுள்ளது. ஞானம் மிக்க கவுதமர், அகல்யை மீண்டு வந்தபின் பலகாலம் மகிழ்ச்சியாக வாழ்ந்து பின்னர் தேவலோகம் சென்றார். சப்தரிஷிகளில் ஒருவரான இவரைப் பற்றிய குறிப்புகள் நான்கு வேதங்களிலும் காணப்படுகிறது.

நாரதர்


உலகம் தோன்றிய காலத்திலேயே தோன்றிய ரிஷி நாரதர். அவர் பாதாளம், மேல்லோகம், பூலோகம் ஆகிய மூவுலகங்களுக்கும் சஞ்சாரம் செய்பவர் என்பதால் திரிலோக சஞ்சாரி என்று அழைக்கப்பட்டார். ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிட்டு நடத்தி வெற்றியடையச் செய்வதில் இவர் கைதேர்ந்தவர். பரம்பொருளான நாராயணனின் நாபிக்கமலத்தில் (தொப்புள்) பிரம்மா அவதாரம் செய்தார். பிரம்மாவின் மனதிலிருந்து சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்று நால்வர் பிறந்தனர். இவர்களைப் பார்த்து பிரம்மா,நீங்கள் எல்லாரும் ஆயிரங்கோடி மக்களைப் பெற்று பிரபஞ்சத்தை விஸ்தரியுங்கள், என்று கட்டளையிட்டார். ஆனால், அவர்களுக்கு அதில் சம்மதமில்லை. பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணமூர்த்தியை அடைவதே தங்கள் குறிக்கோள் என்ற அவர்கள், இல்லறத்தில் ஈடுபட மறுத்துவிட்டனர். எனவே பிரம்மா, மீண்டும் உலக சிருஷ்டியைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தார்.

 தன் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றில் இருந்தும் புலஸ்தியர், புலஹர், அத்ரி, கிருது, மரீசி, ஆங்கிரஸ், பிருகு, தட்சன், கர்தமர், வசிஷ்டர் என்று ரிஷிவர்க்கத்தைப் படைத்தார். இவர்களில் பிரம்மாவின் கழுத்தில் இருந்து பிறந்தார் நாரதர். பிரபஞ்சத்தில் பலகோடி மக்களை உருவாக்கும்படி படைப்புக்கடவுள் அந்த ரிஷிகளுக்கு கட்டளையிட்டார். இவர்களில் நாரதரைத் தவிர மற்றவர்கள், தந்தையின் கட்டளையை ஏற்று, இவ்வுலகை விஸ்தரிக்கும்பணியில் முழுமூச்சாய் ஈடுபடத் தொடங்கினர். நாரதருக்கு இதில் உடன்பாடில்லை. தந்தையின் சொல்லை புறக்கணித்தார். அதோடு மட்டுமல்லாமல், பிரம்மாவுக்கே உபதேசம் செய்யும் அளவுக்குத் துணிந்து விட்டார்.


அப்பா! நீங்கள் தீயவழியில் செல்லும்படி என்னைத் தூண்டுகிறீர்கள். சத்விஷயங்களைப் பிள்ளைக்குச் சொல்லித் தரவேண்டியது தான் ஒரு தந்தையின் கடமை. அதைவிடுத்து இவ்வாறு தவறுக்கு வழிவகுப்பது நல்லதல்ல. நான் எம்பெருமானுடைய பாதார விந்தங்களை அன்றி மற்றொன்றைச் சிந்திக்காதவன். உலக சுகங்களை மறந்த என்போன்றவர்களை ஆதரிக்க வேண்டியது தான் உங்கள் கடமை,என்று புத்திமதி சொன்னார்.பிரம்மதேவருக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. தன் பிள்ளை நாரதரைச் சபித்தே விட்டார். நாரதா! உன் அறிவு அழிந்து போகக் கடவது. நீ பெண் பித்தனாக வாழ்வாய். பருவமங்கையர் ஐம்பது பேரை மணம் செய்து கொண்டு காமாந்தகாரனாகத் திரிவாய். சங்கீதம், வீணையில் பாண்டித்யம், குரல்வளம் என்று குதூகலத்தோடு சிற்றின்பத்தில் மூழ்கிப் போவாய். உன் அழகையும், இளமையையும் கண்டு பெண்கள் மயங்கித் திரிவார்கள்.

 பார்ப்பவர் கண்ணுக்கு கந்தர்வனைப் போல வாலிபனாகத் தெரிவாய், என்று சாபமிட்டார். மேலும், நீ தேவகூட்டத்தில் உபபர்ஹணன் என்று பெயரில் பிறந்து, இரண்டு லட்சம் ஆண்டுகள் சுகபோகங்களில் திளைப்பாய். அப்பிறவி முடிந்ததும், மறுபடியும் ஒரு தாசியின் வயிற்றில் பிறப்பாய். அப்போது உத்தம சிரேஷ்டர்களின் சகவாசம் உண்டாகும். அவர்கள் சாப்பிட்ட எச்சிலை உண்ட புண்ணியத்தால் ஸ்ரீகிருஷ்ணரின் அருள் கிடைக்கும். மீண்டும் என் மகனாகப் பிறவி எடுப்பாய். அப்போது தான் ஞானம் உண்டாகும், என்று சாபமிட்டு தன் கோபத்தை தணித்துக் கொண்டார். நாரதர் பிரம்மாவின் சாபத்தை கேட்டு கதறி ஓலமிட்டார். அப்பா! இது தான் ஒரு தந்தைக்கு அழகா! நான் பல நீசப்பிறவிகளை எடுப்பதால் உங்களுக்கு என்ன பெருமை உண்டாகப்போகிறது. இருந்தாலும் உங்களுக்காக இப்பிறவிகளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், என் சிறுவிண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். எப்பிறவி எடுத்தாலும், எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனின் பாதாரவிந்தங்களை மறக்காத பாக்கியத்தை மட்டும் தாருங்கள்,என்று வேண்டிக் கொண்டார். நாராயணா, நாராயணா என்று சொல்லிக்கொண்டே திரிந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் புஷ்கரம் என்னும் ÷க்ஷத்திரத்தில் கந்தர்வன் ஒருவன் நீண்டகாலமாக பிள்ளையில்லாமல் வருந்திக் கொண்டிருந்தான். அவன் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான். கந்தர்வனின் தவத்தை மெச்சிய சிவன் அவன் முன்தோன்றி பிள்ளை வரம் தந்தார். பிரம்மசாபத்தின் பயனாக, நாரதர் கந்தர்வனின் மகனாக உபபர்ஹணன் என்ற பெயரில் பிறந்தார். சித்திரரதன் என்ற மன்னனின் மகள்களான ஐம்பது பெண்களையும் மணந்து சிற்றின்பத்தில் திளைத்தார். ஆனால், வீணாகானமும், ஸ்படிகமாலையும் கொண்டு ஹரிபக்தி கொண்டவனாகவும் வாழ்ந்தார். கந்தர்வனாக இருக்கவேண்டிய காலம் முடிவடைந்ததும் உயிர்நீத்தார். கான்யகுப்ஜ தேசத்தில் திரமிளன் என்ற அரசன் இருந்தான். அவனது நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. இந்த சந்தர்ப்பத்தில் திரமிளனின் மனைவி கலாவதி கருவுற்று ஒரு ஆண்குழந்தையை ஈன்றாள். திரமிளனுக்கு குழந்தை வந்த நேரம், நாட்டில் மழை பெய்து நீர்வளம் நிறைந்தது. அதனால் நீர் என்ற பொருளில் நாரதன் என்று குழந்தைக்கு பெயரிட்டனர். 

(நாரம் என்றால் தண்ணீர். கடலில் மிதப்பவர் என்பதால் தான் திருமாலுக்கே நாராயணன் என்ற பெயர் ஏற்பட்டது) ஒருநாள் நாரதரின் சகோதரர்களான சனகாதி முனிவர் நால்வரும் அதிதிகளாக கலாவதியிடம் வந்து உணவு பெற்றனர். சிறுவன் நாரதன் அவர்கள் சாப்பிட்ட மீதி உணவை வாங்கி சாப்பிட்டான். பணிவோடு நடந்து கொண்ட அந்தச் சிறுவன் மீது அன்பு கொண்டு அதிதிகள், அவனுக்கு ஸ்ரீகிருஷ்ணமந்திரத்தை உபதேசித்தனர். அன்று முதல் சிறுவன் நாரதன் கிருஷ்ணதாசனாக மாறிவிட்டான். சதா  கிருஷ்ண தியானத்தில் இருந்த நாரதருக்கு கிருஷ்ணரும் குழந்தை வடிவில் காட்சி தந்து மறைந்தார். மீண்டும் கிருஷ்ண தரிசனம் வேண்டி அழுதார் நாரதர். அப்போது, வானில் அசரீரி ஒலித்தது. நாரதா! பிரம்மாவின் சாபம் இன்றோடு உனக்கு நீங்கியது. மீண்டும் அவர் உடம்பிலேயே ஐக்கியமாகி விடுவாய் என்றது. பின்னர் மீண்டும் பிரம்மாவின் கழுத்தில் இருந்து பிறவி எடுத்து திரிலோகசஞ்சாரியாக மாறிவிட்டார். ராமாயணத்தை எழுதிய வால்மீகிக்கு ராமநாமத்தை உபதேசித்தவர் நாரதரே. பக்தபிரகலாதனுக்கு தாயின் கருவில் இருக்கும்போதே அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்து அவனை நாராயண பக்தனாக்கினார். சின்னஞ்சிறு குழந்தை துருவனுக்கு விஷ்ணுமந்திரத்தை உபதேசித்து அவனை நட்சத்திர மண்டலத்தில் ஒளிவிடச் செய்தார். கலகப்பிரியராக இருந்து பல கலகங்களையும் ஏற்படுத்தி நன்மை ஏற்படச் செய்தார்.

வசிஷ்ட மகரிஷி


ரிஷிகளில் வசிஷ்டருக்கு சிறப்பிடம் உண்டு. ஆதிகாலத்தில் பிரம்மா படைப்புத்தொழிலைச் செய்தபோது, பிரஜாபதிகள் என்னும் பத்துப்பேரை முதலில் உண்டாக்கினார். அவர்கள் பல்லாயிரக்கணக்கான கோடிமக்களை உருவாக்கி உலகத்தை விரிவாக்கினர். அவர்களில் ஒருவர் வசிஷ்டர். அதனால் வசிஷ்டர் பிரம்மாவின் பிள்ளை என்கிறது ராமாயணம்.வசிஷ்டரின் பிறப்புக்கு வேறு புராணகாரணமும் சொல்வார்கள். மித்ரன், வருணன் என்று இரண்டு தேவர்கள் இருந்தனர். அந்த இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் என்பதால் அகத்தியர், வசிஷ்டர் இருவரும் மைத்ராவருணி என்ற பெயரால் அழைக்கப் படுவதாக  ரிக்வேதத்தில் கூறப் பட்டுள்ளது. 

வசிஷ்டரிஷியின் மனைவியான அருந்ததி, கர்தம பிரஜாபதி, தேவஹூதி தம்பதியரின் புதல்வியாகப் பிறந்தவள். இவள் சிறந்த பதிவிரதையாக வாழ்ந்ததால் பத்தினிக்கடவுளாகப் போற்றப்படுகிறாள். கணவரைப் போலவே மகாதபஸ்வியாக வாழ்ந்தவள் அருந்ததி. திருமணங்களில் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கும் வழக்கம் உண்டு. மணமகளுக்கு மிகச்சிறிய நட்சத்திரமான அருந்ததி நட்சத்திரத்தை காட்டும் மணமகன், இவள் அருந்ததியை உதாரணமாகக் கடைபிடித்து வாழவேண்டும் என்று சொல்லும் சடங்கு மிக நயமானது. வசிஷ்டரை விட்டுப் பிரியாத பாக்கியம் பெற்றவள் அருந்ததி. ஒருமுறை வால்மீகி ஆஸ்ரமத்திற்கு, சீதையின் தந்தையான ஜனகர் வந்தபோது, அங்கு தற்செயலாக வந்திருந்த அருந்ததியைக் கண்டு கைகூப்பினார். அவளும் உபநிஷத் வாக்கியங்களைச் சொல்லி ஜனகரை வாழ்த்தியதாக உத்தர ராமசரித கதை கூறுகிறது.

பிரம்மாவின் பிள்ளையாகப் பிறந்த இவருக்கு வேதங்களும், நந்தினி என்ற ஒரு தெய்வீகப்பசுவுமே செல்வமாக இருந்தது. நந்தினி பசுவின் காரணமாக, வசிஷ்டர் விஸ்வாமித்திரரின் பகையை சந்திக்க வேண்டி வந்தது. விஸ்வாமித்திரர்  ரிஷியாவதற்கு முன் கவுசிகன் என்ற மன்னனாக இருந்தார். அவர் ஒருமுறை காட்டிற்கு வேட்டையாட வந்த போது, வசிஷ்டரின் ஆஸ்ரமத்தைக் கண்டார்.வசிஷ்டர்,  கவுசிகனை வரவேற்று அவருக்கும் அவரது பரிவாரங்களுக்கும் கணநேரத்தில் விருந்தளித்தார். இதைக் கண்டு கவுசிகனுக்கு பிரமிப்பு உண்டானது.ஆள் நடமாட்டம் இல்லாதகாட்டில் நினைத்தவுடனே வசிஷ்டர் விருந்து கொடுத்துவிட்டாரே என்று ஆச்சரியப்பட்டார். அங்கிருந்த நந்தினி பசு மூலமே இத்தகைய இனிய விருந்தை தர முடிந்தது என்று தெரிந்து கொண்டார். கவுசிகன் வசிஷ்டரிடம், ஆயிரம் பசுக்களைக் கூட உங்களுக்குத் தருகிறேன். எனக்கு நந்தினிப்பசுவைத் தாருங்கள், என்று கேட்டார். 

ஆனால், வசிஷ்டர் சம்மதிக்கவில்லை. கவுசிகன் பலாத்காரத்தால் சண்டையிட்டு பசுவைக் கொண்டுபோக எண்ணி போர் தொடுத்தார். ஆனால், வசிஷ்டர் கவுசிகனின் சேனைகளைத் தோற்கடித்தார். அவமானம் தாங்காமல் கவுசிகன் தலைகுனிந்தார். ஆட்சியில் இருப்பவர்களை விட தவசீலர்களுக்கே மதிப்பு அதிகமென்பதைப் புரிந்து கொண்டு, தவம் செய்யத் தொடங்கினார். தவத்தில் வென்று, வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்ற பட்டத்தையும் பெற்றார். அவரே விஸ்வாமித்திரர் என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். ரிஷி என்றாலே இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவிக்க வேண்டும் என்பது நியதி. வசிஷ்டரின் புத்திரர்களில் மூத்தவர் சக்தி. இவரைக் கல்மாஷபாதன் என்னும் நரமாமிசம் சாப்பிடும் ராட்சஷன் கொன்று தின்று விட்டான். வசிஷ்டருக்கு தன் பிள்ளை இறந்துவிட்டதால் புத்திரசோகம் உண்டானது.

உலகில் பிறந்த உயிர்கள் எல்லாம் என்றாவது ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும் என்ற நியதி வசிஷ்டர் அறியாததா என்ன? இருந்தாலும், அவருடைய மனம் ஒருநிலையில் நிற்கவில்லை. அலைபாய்ந்தது. பின் 49 நாட்கள் செய்யும் ஏகஸ்மாந்ந பஞ்சாச யாகம் என்னும் யாகத்தைச் செய்தார். இதன் பயனாக மீண்டும் புத்திரபாக்கியம் பெற்றார். அதோடு மட்டுமல்லாமல் கல்மாஷபாதனையும் கொன்று தன் வஞ்சத்தைத்தீர்த்துக் கொண்டார். இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த திரிசங்கு மன்னன், மனித உடலோடு சாகாமலே சொர்க்கம் செல்ல வேண்டும் என விசித்திரமான  ஆசை கொண்டான்.  தன் குலகுருவான வசிஷ்டரை அணுகி தன்விருப்பத்தைச் சொன்னான். ஆனால்,திரிசங்கு! நீ நினைப்பது நடக்காத காரியம். அந்த எண்ணத்தை இன்றோடு கைவிட்டுவிடு! என்றார் வசிஷ்டர். அவனுக்கு ஆவல் தணியாமல் மேலும்  மேலும், அதிகரித்துக் கொண்டே போனது. வசிஷ்டரின் பிள்ளைகளை போய் பார்த்து தன் நிலையை எடுத்துச் சொன்னான். 

அவர்கள் திரிசங்குவின் பேராசையைக் கண்டு கோபம் கொண்டு,நீ சண்டாளனாகப் போ! என்று சபித்துவிட்டனர். இறுதியாக திரிசங்கு விஸ்வாமித்திரரைச் சந்தித்தான். வசிஷ்டரின் மீது கொண்ட பகையால் இதை ஒருசவாலாக எண்ணி ஏற்றுக் கொண்டார். இதனால், அரும்பாடுபட்டு சேமித்து வைத்த தபோசக்தியை எல்லாம் இழந்தார்  விஸ்வாமித்திரர். வெற்றி வசிஷ்டருக்குத் தான் கிடைத்தது. வசிஷ்டர் தமது தவமகிமையால் நினைத்தபடி எல்லாவற்றையும் சாதிக்கும் வல்லமை படைத்தவர் தான். ஆனால், அவருடைய செயல்கள் எல்லாம் நியாயத்தின் அடிப்படையில் தான் இருக்கும். தன் உடலோடு வசிஷ்டர் பல உலகங்களுக்கும் அவ்வப்போது செல்வதுண்டு. ஆனால், அங்கேயே நிலையாக இருப்பதில்லை. யாகங்கள் முடிந்தவுடன் அங்கிருந்து வந்து விடுவார். தசரதசக்கரவர்த்தியின் தேர் பத்து திசைகளிலும் தடையின்றிச் செல்லும். வசிஷ்டரிஷியின் மகிமையால் தான் இப்பெருமை தசரதருக்கு வந்தது. அதைப்போலவே ரகு மகாராஜன் என்னும் மன்னனுக்கு, குபேரனிடம் செல்வதற்காகஒரு விசேஷமான தேரினை பெற்றுத் தந்தவர் வசிஷ்டர் தான். 

ரகுவம்சத்தில் காளிதாசர் இதை அழகாக விவரிக்கிறார்.ராமாயணத்தில் தசரதருக்கு புத்திரகாமேஷ்டி யாகத்தை செய்து எம்பெருமான் விஷ்ணு ராமாவதாரத்தை இப்பூமியில் எடுக்கச் செய்த பெருமை வசிஷ்டருக்கே உரியது. இன்னும் சொல்லப்போனால், குலகுரு வசிஷ்டரால் தான் ராமாயண வரலாறு முழுவதுமே திட்டமிடப் பட்டது. ராவண யுத்தம் முடிந்தபின், ராமனுக்கு வசிஷ்டரே முடி சூட்டி வைத்தார். ராமராஜ்யத்திற்கு முடிசூட்டிய பெருமை இவரையே சேரும். சூரியகுலத்தில் இக்ஷ்வாகுவம்சத்து மன்னர்களுக்கெல்லாம் குலகுருவாக இருந்து ராஜ்யபரிபாலனம் செய்ததில் வசிஷ்டர் முக்கியபங்கு வகித்தார்.

வேதநாயகர் வியாசர்


பரதகண்டம் என பெயர்பெற்ற இந்த புண்ணிய பூமியில் பல சான்றோர்கள் இருந்திருக்கின்றனர். அவர்களின் தலை சிறந்தவராக வியாசர் கருதப்படுகிறார். வியாசர் துவாபராயுகம் முடியும் சமயத்திலும், கலியுகம் ஆரம்பமாவதற்கு முன்பும் அவதாரம் செய்தவர் என்று புராணங்கள் வழியாக அறியமுடிகிறது. அவர் இந்த மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில் அறநெறியையும், ஆன்மிக தத்துவத்தையும் உலகிற்கு வழங்கிய வண்ணம் இருந்தார். எல்லாவற்றிற்கும் ஆதாரமான வேதத்தில் சொல்லியுள்ளபடி கலியுகத்தில் பக்திமார்க்கம் குறைந்து நசித்து போகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரே வடிவாக இருந்த வேதத்தையும், அதன் சிதறிக்கிடந்த பாகங்களையும் தொகுத்து ரிக் வேதம், யஜுர் வேதம், சாமவேதம், அதர்வண வேதம் என நான்காக பிரித்தார். பரமாத்மாவான இறைவனை ஜீவாத்மாவான மனிதன் எப்படி கண்டறியவேண்டும் என்பதை விளக்குவது தான் வேதம். 

இறைவனை மந்திரங்களாக துதித்து வழிபடும்படி வழிகாட்டுவது ரிக்வேதம். மனிதன் தன் ஆயுளில் செய்ய வேண்டிய சடங்குகள், அதற்கு தேவையான உபகரணங்கள், ஆட்சியில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய யாகங்கள் ஆகியவை பற்றி தெரிவிப்பது யஜுர் வேதமாகும். பாடல்களால் இறைவனை துதிப்பது சாம வேதம் ஆகும். இதனால்தான் இசையில் சாமகாணம் என்ற பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது. மந்திர தந்திரம், மருத்துவம், சக்தி, வழிபாடு ஆகியவை பற்றி விளக்குவது அதர்வண வேதம். இவற்றை தொகுத்து மக்களுக்கு அளித்ததன் மூலம் அவர் வேதவியாசர் எனப்பட்டார். வியாசர் என்ற சொல்லுக்கு தொகுத்தவர் அல்லது ஆராச்சியாளர் என பொருள்.

இந்த வேதங்களில் ரிக் வேதத்தை சுமந்து என்ற மகரிஷியிடமும், யஜுர் வேதத்தை வைசம்பாயணரிடமும், சாம வேதத்தை ஜைமினி முனிவரிடமும், அதர்வண வேதத்தை பைலரிடமும் ஒப்படைத்து அவற்றைக் கற்று மற்றவர்களுக்கு கற்பிக்கும்படி செய்தார். வேதங்களின் கருத்துக்களை உள்ளடக்கி 18 புராணங்களாகவும், மகாபாரதமாகவும் உருவாக்கினார். அதை சூதம் என்ற முனிவருக்கு உபதேசித்தார். சூதர் அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும்படி அனுக்ரஹம் செய்தார். மகாபாரதத்தில் ஒரு பாத்திரமாகவும் வியாசர் தன்னை மாற்றிக்கொண்டார்.வியாசர் சத்தியவதி தாயின் மகன். இவள் ஒரு ராஜகுமாரி. விதிவசத்தால் ஒரு மீனவக் குடும்பத்தின் வளர்ப்பு மகள் ஆனாள். அந்த மீனவர் தலைவன், சத்தியவதிக்கு பரிசல் ஓட்ட கற்றுத் தந்தான். ஒருமுறை பராசர முனிவர் என்பவர் அந்தப் பரிசலில் பயணம் செய்தார். அந்த நேரம் இந்த உலகில் ஒரு மகாபுருஷன் தோன்ற வேண்டிய நல்ல நேரம். அந்த மகாபுருஷனை கலியுகம் முடிந்து, இந்த உலகம் அழியும் வரை மக்கள் மறக்க மாட்டார்கள். அவன் எழுதப் போகும் காவியம், படித்தவன், படிக்காதவன் என எல்லார் மனதிலும் நிலைத்து நிற்கும் என்பதை பராசரர் உணர்ந்திருந்தார். 

பராசரர் அந்தப் பெண்ணிடம், நாம் இப்போது ஒன்று சேர்ந்தால் உலகம் போற்றும் உத்தமன் ஒருவன் பிறப்பான். இதனால் உன் கன்னித்தன்மை பாதிக்காது. அவன் பிறந்த உடனேயே நீ மீண்டும் உன் கன்னித் தன்மையை அடைவாய், என்றார்.  சத்தியவதி சம்மதித்தாள். பராசரர் ஆற்றின் நடுவிலுள்ள ஒரு தீவை அடைந்தார். அந்தப் பகுதியை இருள் சூழ வைத்தார். அவர்களுக்குப் பிறந்தார் வியாசர். அவர் மிக மிக கருப்பாக இருந்தார். தன் தாயிடம் தான் துறவறம் பூண்டு செல்வதாகக் கூறினார். மகனைப் பிரியும் போது தாய் சத்தியவதி, எதாவது ஒரு இக்கட்டான நிலை வந்தால் நான் உன்னை நினைப்பேன். அப்போது நீ வந்து எனக்கு உதவ வேண்டும், என்றாள்.

வியாசரும் ஒப்புக் கொண்டார். இதனிடையே குருவம்சத்து அரசன் சந்தனுவுக்கு பீஷ்மர் பிறந்தார்.ஒரு சந்தர்ப்பத்தில், பராசரருடன் கூடி வியாசரைப் பெற்ற சத்தியவதியை சந்தனு சந்தித்தான். அவள் மீது ஆசைப்பட்டான். பீஷ்மர் கடும் முயற்சியெடுத்து அவளையே தன் தந்தைக்கு திருமணம் செய்து வைத்தார். அவளுக்குப் பிறக்கும் குழந்தையே நாடாளும் என சத்தியம் செய்தார். அத்துடன் தானும் இனி திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என சபதம் எடுத் தார். தந்தைக்காக தன் வாழ்க்கையையே துறந்து துறவி போல் வாழ முடிவெடுத்தார்.சந்தனுவுக்கும், சத்தியவதிக்கும் சித்திராங்கதன், விசித்திரவீரியன் என்னும் மக்கள் பிறந்தனர். இவர்களில் சித்திராங்கதன் ஒரு போரில் கொல்லப்பட்டான். விசித்திரவீரியன், காசி மன்னனின் மகள்கள் அம்பிகா, அம்பாலிகா ஆகியோரை மணந்தான். அவனும் திருமணமான சில ஆண்டுகளிலேயே குழந்தை எதுவும் பிறப்பதற்குள் இறந்தான். இப்போது அந்தக் குடும்பத்தில் எஞ்சியது பீஷ்மர் மட்டுமே. வேறு வழி இல்லாததால் பீஷ்மரை பட்டம் சூட்டிக் கொள்ளக் கூறினாள் சத்தியவதி. ஆனால் தான் செய்த சத்தியத்தை மீற மாட்டேன் எனக் கூறிவிட்டார் பீஷ்மர். நாடாள வாரிசு இல்லாத நிலையில், தன் மகன் வியாசரை நினைத்தாள் சத்தியவதி. தாயின் உணர்வுகளை புரிந்து கொண்டு அங்கு தோன்றினார் வியாசர். அவரிடம், சான்றோனாகிய நீ, நாட்டின் நலன் கருதி, உன் தமையனின் மனைவியருடன் கூடுவதில் தவறில்லை. அவர்களோடு கூடி குழந்தைகளைப் பெறுவாயாக, என்றாள்.

அம்பிகாவும், அம்பாலிகாவும் இதற்கு சம்மதித்தாலும், கரிய நிறமுடைய, தாடியும், ஜடாமுடியும் கொண்ட வியாசரை விரும்பவில்லை. இருப்பினும் மாமியாரின் விருப்பத்தை நிறைவேற்ற கண்ணை மூடிக் கொண்டு, வியாசருடன் ஒன்று சேர்ந்தாள் அம்பிகா. இதனால் அவளுக்கு ஒரு குருட்டு மகன் பிறந்தான். அவனுக்கு திருதராஷ்டிரன் என பெயர் சூட்டினர். இன்னொரு பெண்ணான அம்பாலிகா வியாசரின் உருவத்தை கண்ட மாத்திரத்தில் முகம் வெளுத்தது. அவள் வெளுத்த முகம் கொண்ட ஒரு மகனைப் பெற்றாள். அவன் பாண்டு எனப்பட்டான். அம்பிகாவுக்கு குருட்டு மகன் பிறந்ததால், இன்னும் ஒரு மகனைப் பெற அம்பாலிகாவைக் கேட்டுக் கொண்டாள் சத்தியவதி. ஆனால், அம்பிகா வியாசருடன் சேர விரும்பாமல், தனக்கு பதிலாக தன் தாதி ஒருத்தியை அனுப்பி விட்டாள். அவள் வியசாருடன் மனம் உவந்து, அவரது தவவலிமையை மட்டும் நினைத்து கூடினாள். அவளுக்கு விதுரன் என்ற மகன் பிறந்தான். இப்படி பாரதக் கதையை துவக்கி வைத்தவரே வியாசர் தான். இவ்வகையில் அவர் பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் தாத்தா ஆகிறார். இதைத்தவிர வேதங்களில் உள்ளடங்கி உள்ள தத்துவங்களை சுருக்கமாக மனிதன் புரிந்து கொள்ளும் வகையில் பிரம்மசூத்திரம் எனப்படும் வேதாந்த சூத்திரங்களாக உருவாக்கினார். இது பிக்ஷú சூத்திரம் என்றும், வியாச சூத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆதிசங்கரர், ராமானுஜர், மத்துவர் ஆகியோர் பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதியுள்ளார்கள்.
தனது நுண்ணறிவால் மனித குலத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கினார். இந்து மதத்தின் ஆதிகுருவாக வேதவியாசர் போற்றப்படுகிறார். இவர் ஆஞ்சநேயரைப் போல சிரஞ்சீவி பட்டம் பெற்றவர். சிரஞ்சீவி என்றால் என்றும் வாழ்பவர் என பொருள். கலியுகம் தோன்றி எவ்வளவோ ஆண்டுகளாகி விட்ட போதிலும் வியாசரின் மகாபாரதம் இன்றும் மக்களுக்கு வேதம் போல் விளங்குகிறது. அதில் கூறப்பட்டுள்ள ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டுமென உபன்யாசகர்கள் வற்புறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக விளங்குகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாதம் என்படும் ஆனி பவுர்ணமியின் குருவை வணங்கவேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. வடமாநிலங்களில் ஆனி பவுர்ணமியை குரு பூர்ணிமா என சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஞானத்தை உணர்ந்துவதால் குரு பரம்பொருளாக சொல்லப்படுகிறார். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தந்தைக்கு அடுத்தபடியாக குருவே வருகிறார். அன்னை மீது கொள்ளும் பக்தியால் இப்பிறவியில் இன்பம் பெறலாம். தந்தை மீது கொள்ளும் பக்தியால் மறுபிறவியில் இன்பம் பெறலாம். குரு பக்தியால் பிறப்பற்ற நிலையை எய்தலாம். ராமர், கிருஷ்ணர் போன்ற அவதார புருஷர்களாக இறைவன் அவதரித்த போது அவர் கூட ஒரு குருவிடம் தீட்øக்ஷ பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன.

வால்மீகி


திருடன் ஒருவன் தனது குதிரையில் காட்டுப்பாதையில் வந்து கொண்டிருந்தான். அப்போது சில முனிவர்கள் வந்தனர். விசாலமான நெற்றி, பிரகாசம் பொருந்திய முகம், ஒளி பொருந்திய கண்கள் என்று ஏழுபேரும் தவசிரேஷ்டர்களாக இருந்தனர். அவர்களை மறிக்க அவன் நெருங்கினான். அப்போது, அவர்களது முகத்தில் இருந்து கிளம்பிய ஒளி, அவனது கண்களைக் கூச வைத்தது.திருடனுக்கு வியப்பாக இருந்தது. இருப்பினும், அவர்களில் ஒருவரையாவது தாக்கி அவரிடம் உள்ள கமண்டலத்தையாவது பறித்து விடும் எண்ணத்தில் பின் தொடர்ந்தான். ஒரு முனிவர் ஒரு கிணற்றின் கரையில் நின்றார். மற்றவர்கள் முன்னால் சென்று விட்டனர். திருடன் தனது வில்லால் அந்த முனிவரைத் தாக்க முயன்றான். ஆனால், மனதில் ஏதோ குழப்பம் உண்டானது. திடீரென்று அவர் முன் போய் நின்றான். சாஷ்டாங்கமாய் பாதத்தில் விழுந்தான். அருளே உருவான அந்த முனிவர் பாதத்தில் விழுந்தவனை எழுப்பினார்.மகனே! தயங்காமல் உன் தேவையை என்னிடம் சொல்! என்றார். 

திருடன் அவரிடம்,சுவாமி! என் குடும்பம் பட்டினியாக இருக்கிறது. உங்கள் பொருளை எடுத்துச் சென்றால் தான் என் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும், என்றான். இதைக் கேட்ட முனிவர் கலக்கம் கொள்ளவில்லை. உன் விருப்பப்படியே செய். எனக்குத் தடையேதும் இல்லை. ஆனால், உன் நலத்திற்காக ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு பதில் சொல், என்றார். திருடன், அதற்கென்ன!  தாராளமாக பதில் சொல்கிறேன், என்றான். நல்ல நிலையில் உள்ள ஒரு உயிரை இம்சை செய்து பொருட்களைப் பறிப்பது கொடியபாவம் என்கிறது தர்மசாஸ்திரம். நீ செய்வது பாவம் தானே! என்றார் ரிஷி.ஆமாம்! நீங்கள் சொல்வதை நானும் ஏற்கிறேன். 

ஆனால், இதைத் தவிர வேறு தொழில் தெரியாதே. தெரிந்தே இப்பாவத்தைச் செய்கிறேன், என்றான்.ரிஷி மேலும் கேட்டார்,ஒருவனை அடித்து எடுத்துச் சென்ற பொருளை நீ ஒருவனே அனுபவிக்கிறாயா?இல்லை சுவாமி! என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இதில் பங்குண்டு. நான் கொண்டு செல்<லும் பொருளில் தான் எல்லாருக்கும் சாப்பாடு நடக்கிறது, என்றான்.
நீ கொண்டு போகும் பொருளை அனுபவிக்கும் உன் குடும்பத்தார் உன்னைச் சேரும் பாவத்திலும் பங்கெடுப்பார்களா? என்ற ரிஷியிடம், இதற்கு பதில் சொல்ல எனக்குத் தெரியவில்லை. குடும்பத்தலைவன் என்ற முறையில் ஏதோ தொழில் செய்து அவர்களுக்கு உணவிடுவது என் கடமை,என்றான் திருடன். நல்லது! உன் பாவத்திலும் குடும்பத்தினர் பங்கெடுப்பார்களா என்பது இப்போது மிக முக்கியமான விஷயம். உன் ஈனச் செயல்களால் பெரும் பாவங்களை மலைபோல குவித்திருக்கிறாய். நான் மட்டுமல்ல... மற்ற ரிஷிகளையும் இப்போதே அழைத்து வந்து இங்கேயே அமர்ந்திருக்கிறேன். நீ சென்று உங்கள் குடும்பத்தாரின் நிலையை அறிந்து வந்து எங்களிடம் தெரியப்படுத்து! பின்னர் உன் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் தாக்கி பொருளைப் பறித்துக் கொள்ளலாம். என்று யோசனை தெரிவித்தனர். 

திருடன் அவர்களிடம், என்ன! கபடநாடகம் நடத்துகிறீரா? என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இங்கிருந்து தப்பி விடலாம் என்று தானே இப்படியொரு திட்டம் போட்டிருக்கிறீர். அது நடக்காது,என்றான்.முனிவர் அவனிடம், நீ திரும்பி வருகின்ற வரையில் நான் இங்கிருந்து நகர மாட்டேன். இது சத்தியம். நீ தாராளமாக என்னை நம்பலாம். சீக்கிரம் கேட்டுவிட்டு மட்டும் வந்துவிடு. உன் நன்மைக்காகத் தான் இதைச் சொல்கிறோம். என்றார்.முனிவரின் வார்த்தையில் உண்மை இருப்பதாக திருடனின் மனதிற்குப்பட்டது.அவன் வீட்டுக்குச் சென்றான்.பசியோடு காத்திருந்த குடும்பத்தினருக்கு வெறுங்கையோடு அவன் வந்தது கோபத்தை உண்டு பண்ணியது.அவர்களின் எண்ணத்தை உணர்ந்த கள்வன்,  கோபப்படாதீர்கள். இன்றைக்கு உங்களுக்கு வேண்டிய பொருளுக்கு ஏற்பாடு செய்து விட்டேன்.

என் சந்தேகத்திற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்,என்றவன், அன்றாடம் நான் பாவம் செய்து கொண்டு வரும் உணவை ஏற்றுக்கொள்ளும் நீங்கள், என் பாவத்திலும் பங்கெடுப்பீர்களா?என்று கேட்டான்.குடும்பத்தலைவனான நீர் கொண்டுவரும் உணவில் தான் எங்களுக்கு பங்குண்டே தவிர, அதனைப் பெறும் வழி பாவமோ, புண்ணியமோ, அதைப்பற்றி எங்களுக்கு எவ்வித கவலையும் இல்லை. அதில் எங்களுக்கு பங்கும் இல்லை. சீக்கிரம் இன்றைய உணவிற்காக ஏற்பாட்டினைச் செய்யும், என்றனர்.வீட்டாரின் பதிலைக் கேட்ட திருடனுக்கு ஞானம் பிறந்தது. திரும்ப வந்தான். அதற்குள் ஏழு முனிவர்களும் அங்கே கூடிவிட்டனர். அவர்களின் காலில் விழுந்தான். இதுநாள் வரை தான் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தரும்படி கண்ணீர் விட்டான். ஞானிகளின் தரிசனம் வீண்போகுமா? திருடன் அறிவுக்கண் பெற்றான். அவனுக்கு ராம மந்திரத்தைப் போதித்தனர். அங்கிருந்த மரா மரத்தின் அடியில் அமர்ந்து அம்மரத்தின் பெயரையே உச்சரித்து வரும்படி கூறினர். இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்தால் இன்றோடு உன் பாவமூட்டை உன்னை விட்டு அகன்று விடும். நீ நற்கதி பெறுவாய், என்று அருள்செய்து விட்டு அவர்கள் மறைந்தனர். 

காலச்சக்கரம் சுழன்றது. கள்வன் தன் மனதை ஒருமுகப்படுத்தி தவம் செய்ய, மரத்தடியில் அமர்ந்தான். அவன் அமர்ந்திருந்த மரா மரத்தின் பெயரைச் சொல்லி வந்தான். அதை வேகமாகச் சொல்லும் போது, அவனையறியாமல் ராம என மாறியது. அவன் கண்விழிக்கவே இல்லை. சுற்றிலும் புற்று உண்டானது. ராமநாமத்தால் அவனின் பாவங்கள் அடியோடு நீங்கின. அவர் பெரிய மகான் ஆனார். புற்றில் இருந்து வந்த மகான் என்பதால், அவருக்கு வால்மீகி என்ற பெயர் ஏற்பட்டது. வால்மீகம் என்றால் புற்று எனப்பொருள். இவரே ராமாயணம் என்னும் தெய்வீக காவியத்தை நமக்கு அளித்தார். யோகவாசிஷ்டம், அத்புத ராமாயணம், கங்காஷ்டகம் ஆகிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டன.

Monday 6 May 2013

கும்பாபிஷேகம் : சில தகவல்கள் ...


கும்பாபிஷேகத்தின் போது என்னென்ன சடங்குகள் நடத்தப்படும் என்பதை பார்த்திருப்பீர்கள். அவற்றிற்குரிய விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆவாஹனம்
ஆவாஹனம் என்றால் கும்பத்தில் உள்ள நீருக்குள் மூர்த்திகளை எழுந்தருள செய்தல் என்பது பொருள். கும்பத்தை முதலில் கோயிலில் உள்ள தெய்வத்திருவின் அருகில் வைத்து தர்ப்பை, மாவிலை ஆகியவற்றைக் கொண்டு மந்திரங்கள் ஓதி, பிம்பத்தில் விளங்கும் மூர்த்தியை கும்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள். பிறகு அந்த கும்பத்தை யாகசாலைக்கு எழுந்தருளச் செய்வார்கள். தர்ப்பையின் மூலம் கும்பத்தில் உள்ள தெய்வீக சக்தியை பிம்பத்திற்கு மீண்டும் செலுத்துவார்கள்.
கும்பம்
யாகசாலையில் மந்திரம், கிரியை, தியானம் ஆகியவற்றுடன் வளர்க்கப்பட்டு எழும் புகையுடன் வேத ஒலி, சிவாகம ஒலி, மறை ஒலி ஆகியவற்றுடன் பக்தர்களின் நல்ல எண்ணங்களும், எங்கும் நிறைந்திருக்கின்ற திருவருள் சக்தியை தூண்டிவிட்டு கும்பத்தில் விளங்கச் செய்யும். அப்போது கும்பம் தெய்வீக சக்தி பெறும். இந்த கும்பத்தை சிவனின் வடிவமாக ஆகமங்கள் கூறுகின்றன.
பாலாலயம்
கும்பத்தை கோயிலில் உள்ள தெய்வச்சிலை அருகில் வைப்பார்கள். தர்ப்பை, மாவிலை கொண்டு மந்திரங்கள் ஓதி, தெய்வ வடிவில் விளங்கும் மூர்த்தியை கும்பத்திற்கு மாற்றுவார்கள். பின்பு அதை வேறிடத்திற்கு எழுந்தருளச் செய்வார்கள். இதை  பாலாலய பிரவேசம் என்பர்.
கிரியைகள்
கும்பாபிஷேகம் நடக்கும்போது ஒரு காலத்தில் 64  கிரியைகள் செய்யப்பட்டன. காலப்போக்கில் 55 கிரியைகள் செய்யப்பட்டன. ஆனால் தற்போது எல்லா கிரியைகளும் செய்யப்படுவதில்லை. 64ல் முக்கியமான 13 கிரியைகளை மட்டும் தேர்ந்தெடுத்து கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.
ஆசாரியவர்ணம்
கும்பாபிஷேகத்திற்கென கிடைக்கும் பொருளுக்கு பூஜை செய்ய வேண்டும். இதை தன பூஜை என்பர். பூஜை செய்த பணம் அல்லது பொருளில் ஒரு பகுதியை கட்டட வேலைக்கும், ஒரு பகுதியை நித்திய, மாதாந்திர, விசேஷ நட்சத்திர பூஜை உற்சவத்திற்கும், மூன்றாவது பாகத்தை ஆபரணங்கள் வாங்கவும் ஒதுக்குவார்கள். இப்படியே கோயில் காரியங்கள் சம்பந்தப்பட்ட 11 பாகமாக இந்த செல்வத்தை பிரிப்பார்கள். கும்பாபிஷேகத்தை நடத்தும் பிரதான ஆசாரியரை வணங்கி, இந்த செல்வத்தைக் கொண்டு குடமுழுக்கு நடத்தி தாருங்கள் என கேட்டுக்கொள்ள வேண்டும். இதையே ஆசாரியவர்ணம் என்பர்.
அனுக்ஞை
கோயில் பழுது பார்க்கப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்ற பிறகு, ஒரு நல்ல நாளில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னின்று நடத்தி வைப்பதற்கு தகுதியான ஒருவரை தேர்ந்தெடுப்பதையே அனுக்ஞை என்கிறார்கள். விநாயகர் சன்னதி முன்பு இந்த நிகழ்ச்சி நடக்கும். சம்பந்தப்பட்டவரே கும்பாபிஷேகத்தை நடத்தித் தர அனுமதி தரவேண்டும் என விநாயகரிடம் வேண்டி கேட்டுக்கொள்வதே அனுக்ஞை ஆகும்.
பிரவேசபலி
கும்பாபிஷேகம் செய்யும் இடத்திலிருந்து எட்டு திசைகளிலும் வசிக்கின்ற ராட்சதர் முதலான தேவதைகளுக்கு உணவு கொடுத்து எழுப்பி, அவர்களை கடல், மலை, காடு, ஆறு, மயானம் ஆகிய இடங்களில் சென்று இருங்கள் என திருப்திப்படுத்தி வழி அனுப்புவதே பிரவேச பலி ஆகும். கும்பாபிஷேகங்களில் மட்டுமின்றி, கோயில்களில் திருவிழா நடக்கும்போதுகூட இதை செய்ய வேண்டுமென்று ஆகமங்கள் கூறுகின்றன.
வாஸ்துசாந்தி
ஆகமங்களிலும், சிவமகா புராணத்திலும் வாஸ்து பற்றி கூறப்பட்டுள்ளது. அந்தகாசுரன் என்பவனை கொல்வதற்காக தேவர்கள் சிவபெருமானிடம் கோரிக்கை வைத்தனர். சிவபெருமான் தனது வியர்வைத் துளியிலிருந்து ஒரு பூதத்தை உருவாக்கி அந்தகாசுரனை வதைத்தார். அந்த பூதம் சிவனிடம் பல வரங்கள் பெற்று உலகத்தை வருத்தியது. சிவபெருமான் பூதத்தை அடக்க அதிபவன் என்பவரை சிருஷ்டித்து அனுப்பினார். அதிபவன் அந்த பூதத்தின் உடலின்மீது 53 தேவதைகளை வசிக்க செய்து, மாயக்கயிறுகளால் கட்டினார். இதனால் இவர் வாஸ்துபுருஷன் என பெயர் பெற்றார். வாஸ்து புருஷனால் குடமுழுக்கு கிரியைக்கு இடையூறு நேராதபடி 53 தேவதைகளுக்கும் பூஜை, பலி, ஹோமம் ஆகியவற்றால் சாந்தி செய்ய வேண்டும். இதுவே வாஸ்துசாந்தி ஆகும்.
ரக்ஷா பந்தன்
காப்பு கட்டுதல் என இதற்கு பொருள். சிவாச்சாரியார்கள் நாகராஜனுக்கு பூஜை செய்து, மந்திரித்த மஞ்சள்கயிறை வலது மணிக்கட்டில் கட்டிக்கொள்வார்கள். கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் சிவாச்சாரியார்களின் குடும்பத்தில் எதிர்பாராதவகையில் ஏதாவது தீட்டு ஏற்பட்டால் காப்பு அவிழ்க்கப்படும்வரை அந்த தீட்டு அவர்களை பாதிக்காது.
கடஸ்தாபனம்
கும்பாபிஷேகத்தில் மிக முக்கியமானது கடஸ்தாபனம்.  கலசம் நிறுவுதல் என்பது இதன் பொருள். தங்கம், வெள்ளி, தாமிரம், மண் ஆகிய ஏதாவது ஒன்றில் கும்பங்கள் செய்யப்படும். கும்பங்களை இப்படித்தான் அமைக்க வேண்டும் என்ற வரையறைகள் உள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட கும்பங்களை குறைகள் இல்லாமல் மந்திரித்து, அக்னியில் காட்டுவார்கள். சிவப்பு மண்ணை கும்பத்தின் மீது பூசி, நூல் சுற்றி ஆற்றுநீர் அல்லது ஊற்று நீரால் நிரப்புவார்கள். கும்பத்தின் மேல் வாய் பகுதியில் மாவிலைகளை செருகி, தேங்காய் வைப்பார்கள். கும்பத்திற்குள் நவரத்தினம், தங்கம், வெள்ளி, நவதானியம் ஆகியவற்றை பரப்புவார்கள். எந்த மூர்த்திக்கு குடமுழுக்கு நடக்கிறதோ அந்த மூர்த்தியின் உடலாக அந்த கும்பம் கருதப்படும்.
அஷ்டபந்தனம்
கும்பாபிஷேகத்தை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் என சொல்வதுண்டு. பீடத்தின்மீது வைக்கப்படும் தெய்வ திருவுருவங்கள் அசையாமல் உறுதியுடன் நிலைத்து நிற்க, கொம்பரக்கு, சுக்கான்தான், குங்குலியம், கற்காவி, செம்பஞ்சு, ஜாதிலிங்கம், தேன்மெழுகு, எருமையின் வெண்ணெய் ஆகிய எட்டுவகை மருந்துகளை கலந்து சார்த்துவார்கள். அஷ்டம் என்றால் எட்டு என பொருள். இந்த எட்டுவகை மருந்துகளை சார்த்துவதற்கே அஷ்ட பந்தனம் என பெயர்.
மிகுத்சம்கிரஹணம்
இதற்கு மண் எடுத்தல் என பொருள். கும்பாபிஷேகத்தின்போது அங்குரார்ப்பணம் எனப்படும் முளையிடுதல் நிகழ்ச்சி நடக்கும். மண்ணைத்தோண்டி பாலிகைகளில் இட்டு, நவதானியங்களை தெளித்து, முளைப்பாலிகை அமைப்பார்கள். இதுவே மிகுத்சம் கிரகஹணம் எனப்படும்.

கணபதி ஹோமத்தின் சிறப்பு!

எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்தபிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் நடத்தும்போது கணபதி ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து சுகவீனம் ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்றாகப் பெறலாம். ஒரு கடிதம் எழுதும்போதும் கூட பிள்ளையார்சுழியுடன் துவங்குவது மரபு. விநாயகரே முழு முதற்கடவுள். சிவபெருமான் முப்புரங்களையும் அழிக்க புறப்பட்ட போது கணபதி மந்திரத்தை சொல்ல தவறிவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது.


பெற்ற பிள்ளையாக இருந்தாலும்கூட கணபதியை வணங்கிய பிறகே எந்த செயலையும் துவங்கவேண்டும் என உத்தரவிட்டவரே சிவபெருமான்தான். அவரே அந்த விதியை கடைபிடிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டது. சிவபெருமானின் தேர் அச்சு முறிந்த இடத்தை இப்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கிறார்கள். செங்கல்பட்டு அருகே இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகரையும் அச்சிறு விநாயகர் என்றே அழைக்கிறார்கள். கணபதி ஹோமத்தை விநாயகர் வேள்வி என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் ஓதி, அவரை புகழ்ந்து பக்திப்பாடல்களை மனமுருகிப் பாடி கணபதி ஹோமத்தை நிறைவேற்ற வேண்டும். நம் வீடுகளில் நடக்கும் காதணி விழா, பிறந்தநாள், திருமண நிகழ்ச்சி, தொழிற்சாலைகளில் நடக்கும் பவள விழா, முத்துவிழா ஆகிய நிகழ்ச்சிகளிலும் கணபதி ஹோமம் செய்ய வேண்டும். புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் வேள்வி அவசியம். 

நல்ல காரியங்களில் மட்டுமின்றி மறைந்த நம் முன்னோரை நினைவுபடுத்தும் நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் கணபதி ஹோமம் செய்வது மிகச்சிறந்த பலனைத்தரும். நமது சக்திக்கு ஏற்றபடி செலவு செய்து இந்த பூஜையை நடத்தலாம். தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை 5 ஆயிரம் ரூபாய்வரை இதற்கு செலவாகும். வீடுகளில் ஆயிரம் ரூபாய்க்குள் இந்த பூஜையைச் செய்து முடிக்கலாம். கணபதி ஹோமத்தை ஒருமணி நேரத்திற்குள் செய்து முடித்துவிடலாம்.

பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள்


சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டின் துவக்க மாதம். இந்த மாதத்தை எந்த அளவு மகிழ்வுடன் வரவேற்கிறோமோ அதே போல இந்த மாதத்தில் பிறந்தவர்களையும், அனைவரும் விரும்புவது உண்டு. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். ஏதாவது ஒரு லட்சியத்தை மனதில் கொண்டு அதை நறைவேற்ற வேண்டும் என்பதில் முழு மூச்சுடன் ஈடுபடுவார்கள். எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் பிரகாசிக்கும் வாய்ப்பு உண்டு. குறிப்பாக அறிவியல் மற்றும் காவல் துறைகள் இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்றவை. உங்கள் முயற்சியில் மின்னல் வேகம் இருக்கும். எதற்கும் கலங்காத மனம் உண்டு. இந்த வேகத்தை செயல்படுத்தும்போது மற்றவர்களை பகைத்துக்கொள்ள வேண்டி வரும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால் சக தொழிலாளர்களை விரட்டி வேலை வாங்க வேண்டியிருக்கும். அப்போது அவர்கள் உங்களை அக்னி போல நனைத்து ஒதுங்கிப்போவார்கள். உங்களை  திட்டுவார்கள். இதையெல்லாம் தாங்கிக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்க வேண்டும். வேலை செய்யாமல் ஏதாவது ஒரு மூலையில் முடங்கி இருப்போம் என்ற எண்ணமே உங்களுக்கு  பிடிக்காது. சூரியனின் பலத்தால் உங்களிடம் ஆற்றல் அதிகம். செவ்வாய் உங்கள் சக்தியை வெளிப்படுத்தும். சுக்கிரன் உங்களை எதிர்ப்பவர்களை விரட்டியடிக்கும் தன்மையைக் கொடுப்பார். இன்னும் கொஞ்சநிõள் கழித்து ஒரு காரியத்தை செய்வோமே என்று ஒதுக்கிவைக்கும் பழக்கம் உங்களிடம் இல்லை. பெரிய துணிவைப் பெற்றுள்ள நீங்கள், உங்கள் மனதிற்குள் கோழை என்றே உகளை எண்ணிக்கொள்வீர்கள். இதற்கு காரணம் அவசரமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பரபரப்புடனும், ஆத்திர உணர்வுடனும், உணர்ச்சி கிளர்ந்தெழுவதாலும் ஏற்படும் நிரம்புத்தளர்ச்சியால் யாரைப் பார்த்தாலும் கத்தத் தொடங்கிவிடுவீர்கள். இந்த கோபத்தை அடக்க நீங்கள் பழகிக்கொண்டால் உங்கள் வாழ்க்கை சித்திரை சூரியன் போல பிரகாசமாக அமையும். பொதுவாகவே சித்திரை மாதத்தில் பிறந்தவர்களுக்கு கோபம் மிக அதிகமாக இருக்கும். சூரியனின் வெப்ப சூழலில் பிறந்ததால் ஏற்படும் ஆத்திரமே இது. இதற்கு உடல் நிலத்தையும் பேணிக்கொள்வதன் முலம் ஆத்திரத்தை அடக்கலாம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். வாரம் ஒரு முறைய õவது குளிர்ந்த நீரில் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும். திருத்தலங்களுக்கு சென்று அங்கு ஓடும் ஆறுகளில் மூழ்கி நீராடவேண்டும். சித்திரை மாதத்தில் பிறந்த பெண்கள் நிடை, உடை, பாவனைகளில்கூட கவர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். இந்த கவர்ச்சியின் காரணமாக மற்ற மாதங்களில் பிறந்தவர்கள் உங்களிடம் பொறாமை கொள்வார்கள். ஆனால் உங்கள் உள்மனதை புரிந்துகொண்டால் அவர்கள் உங்களிடம் ஆயுள் முழுவதும் நிட்புடனும் உறவுடனும் இருப்பார்கள். மொத்தத்தில் உங்கள் முன்கோபத்தை மட்டும் தவிர்த்துவிட்டால் உங்களை வெல்ல யாராலும் முடியாது. உங்கள் இளம் வயதில் நீங்கள் கோபக்காரராக இருப்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் திருமணமான பிறகு இந்த கோபத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்.

வைகாசியில் பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். காலம்தான் இவர்களுக்கு மறதியைக் கொடுக்க வேண்டும். இவர்கள் வாழ்க்கையில் பல அனுபவங்களை பெறுவார்கள். இதை மற்றவர்களிடம் சொல்லி, எனது அனுபவத்தில் நான் இன்னின்ன துன்பங்களையும் இன்பங்களையும் சந்தித்திருக்கிறேன். என்னை முன் உதாரணமாகக் கொண்டு நடந்துகொள்ளுங்கள் என கூறுவர். இதனால் துன்பத்தையும் இன்பத்தையும் சமமாக பாவிக்கும் பழக்கம் இவர்களிடம் உண்டு. இவர்கள் திடகாத்திரமான உடலமைப்பு கொண்டவர்கள். இவர்களுக்கு நோய் ஏற்பட்டாலும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் டாக்டரிடம் போகக்கூட வேண்டாம் என நினைத்து தங்கள் பணியை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதேநேரம் இவர்களிடம் பொறுமை அதிகம் என்பதால் வேலையை முடிக்க அதிகநேரம் எடுத்துக் கொள்வார்கள்.  இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிப்பதுபோல் இந்த மாதத்தில் பிறந்த தொழிலதிபர்களாக இருந்தாலும் சாதாரண தொழிலாளியாக இருந்தாலும் அவரவர் துறையில் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை வேலைகளை தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு படிப்பு வராவிட்டாலும் அதைப் பற்றி கவலை கொள்ள மாட்டார்கள். தங்கள் அனுபவ அறிவால் படித்தவர்களை விட சிறப்பாக செயல்படுவார்கள். இவர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டார்கள். ஆனால் யாராவது இவர்களிடம் சண்டை போட்டால் கடைசிவரை விடாப்பிடியாக நின்று அதில் வெற்றி பெறும்வரை போராடுவார்கள். ஆனால் இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு என்னதான் பொருள் வந்தாலும் அது கையில் நிற்காத அளவிற்கு செலவழிந்து போவதுண்டு. செலவுகளை கட்டுப்படுத்த முயன்றாலும், வீட்டில் உள்ள மற்றவர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டு செலவழிக்க வேண்டிய அவசியம் வந்துவிடும். இவர்கள் வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்கள். சிறு குடிசையாக இருந்தாலும் கூட அதனுள் நுழைந்தால் பெரிய மாளிகைக்குள்ளோ அல்லது புனிதமான கோயிலுக்குள்ளோ வந்ததுபோன்ற உணர்வு ஏற்படும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் யாரிடமும் லேசாக பழகமாட்டார்கள். பழகியவர்கள் இவர்களுக்கு துரோகம் நினைத்தால் காலம் முழுவதும் அவர்கள் முகத்தில் விழிக்கமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு சோம்பல் அதிகம். வேகமாக வேலை செய்துகொண்டிருக்கும்போதே திடீரென சோம்பல் தலைதூக்கி அப்படியே உட்கார்ந்துவிடுவார்கள். பணம் இவர்களிடம் சேராமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம். இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு நல்ல கணவன் அமைவான்.  இவர்களுக்கு லேசில் கோபம் வராது. கோபம் வந்தால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல கடுமையான கோபம் வரும். இந்த குணத்தை மட்டும் நீங்கள் மாற்றிக்கொண்டால் உங்களை யாராலும் வெல்ல முடியாது. இதுபோல சோம்பல் ஏற்படும் நேரங்களில் மட்டும் அதை எப்படியாவது விடுத்து பணியில் தீவிரம் காட்டினால் வாழ்வில் வருத்தம் என்பதே இருக்காது.

ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள். இவர்களிடம் மற்றவர்களை அடக்கி ஆளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்திக்கொண்டு இவர்கள் வாழ்க்கையில் மிகவும் முன்னேறத் துடிப்பார்கள். இவர்களைப் பொறுத்தவரை, தானும் சிரித்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணுபவர்கள். இவர்களிடம் சிந்திக்கும் சக்தி அதிகம். சிந்தித்ததை செயல்படுத்த வேண்டும் என்றும் கருதுவார்கள். அதேநேரம் இவர்களுக்கு குணம் அடிக்கடி மாறுபடும். ஒரு வேலையை துவங்கி அதை செய்து கொண்டிருக்கும்போதே இன்னொரு வேலையில் கால் வைப்பார்கள். இதனால் பழைய வேலை கெட்டுப்போகும் வாய்ப்பு உண்டு. எனவே இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எடுத்த வேலையை முடித்துவிட்டு, அடுத்த வேலைக்கு செல்வது நலம் பயக்கும். இவர்கள் மற்றவர்களை மயக்கும் வகையில் பேசுவார்கள். இந்த பேச்சைக்கொண்டு இவர்கள் எழுத்து மற்றும் மேடைப்பேச்சில் ஈடுபட்டால் எதிர்காலம் சிறக்கும். இவர்கள் எந்த விஷயத்தை எடுத்தாலும் சந்தேகப்படுவதும் உண்டு. இதை தவிர்க்க முயல வேண்டும். ஆரம்பிக்கும் முன்பே தீர ஆலோசித்து ஒரு வேலையை தொடங்கினால் இந்த பிரச்னைக்கு இடம் இருக்காது. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஞாபகசக்தி மிக்கவர்கள். ஆனியில் பிறந்தவர்கள் நகைச்சுவை பிரியர்கள். இவர்கள் ரோஷக்காரர்கள். மற்றவர்கள் ஏதாவது தங்களுக்கு இடையூறு செய்தால் அதற்காக வருத்தப்படவும் செய்வார்கள். எரிந்தும் விழுவார்கள். இவர்கள் மனைவி மற்றும் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களில் யாரையாவது தொழில் காரணமாகவோ பிற காரணங்களாலோ பிரிய வேண்டி வந்தால் அதனால் ஏற்படும் கஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி அற்றவர்கள். இவர்கள் கட்டட வேலை, வண்டி இழுத்தல் போன்ற வேலைகளை செய்ய தயங்குவார்கள். இவர்களைப் பொறுத்தவரை கிளார்க் தொழில் செய்யவே அதிகமாக விரும்புவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பணக்காரர்கள் தொழிலதிபர்களாக இருக்கவே விரும்புவார்கள். சிறு சிறு வேலைகளை செய்ய விரும்புவதில்லை. ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு பைனான்ஸ் தொழில் சரியாக வராது. இவர்கள் வட்டி வாங்கும் குணம் உடையவர்கள் அல்ல. அதே போல பிறரிடம் கடன் வாங்கினாலும் உடனே திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அரக்கப் பரக்க வேலை பார்ப்பார்கள். இவர்களில் சிலர் கெட்டவர்களுடன் சகவாசம் வைத்து அதனால் வாழ்க்கையையே தொலைத்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தீயவற்றில் இருந்து மீண்டு நல்லதையே செய்து பழகினால் மீண்டும் தீமைகள் இவர்களை அணுகாது. இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். இவர்களுக்கு அதிகமான குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதே நேரம் குழந்தைகளால் சிறிது காலம்வரை கஷ்டப்படுவார்கள்.

ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். எதிர்காலத்தை திட்டமிடுவதில் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. அந்த கற்பனைகளை செயல்படுத்துவதற்காக என்னென்ன வித்தைகளை செய்ய முடியுமோ அத்தனையும் செய்வார்கள். இந்த மாதத்தில் பிறந்த ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் திருமணமாகி குழந்தை பெற்றுவிட்டால் இவர்கள் காட்டும் பாசத்தை வேறு யாராலும் காட்ட இயலாது. குடும்பத்தின் மீதுள்ள பாசத்தை மனதிற்குள் வைத்துக்கொண்டு, பெற்றவர்களிடமோ மற்றவர்களிடமோ காட்டமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு தமிழ் மொழி மீது அதிக விருப்பம் இருக்கும். தமிழில் அதிக மார்க் வாங்குவார்கள். இந்த மாதத்தை கடக மாதம் என சொல்வதுண்டு. கடகத்திற்குரிய சின்னமான நண்டைப்போல இவர்கள் மற்றவர்களை பேச்சில் கடித்தும் விடுவார்கள். அதே நேரம் முன்னெச்சரிக்கையாக ஒதுங்க வேண்டிய நேரத்தில் நண்டு ஓடி ஒளிந்துகொள்வது போல மறைந்தும் கொள்வார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பணம் ஈட்ட வேண்டுமென்று திட்டமிட்டு அதை மட்டும் செயல்படுத்துவதில் இறங்கிவிட்டால் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. அதேநேரம் பணம் நம்மைத் தேடி வரட்டும் என இருந்துவிட்டால் பிற்காலத்தில் மிகவும் நொந்துகொள்ள வேண்டி வரும். இவர்கள் அரசியலில் ஈடுபட்டால் பழைய தலைவர்களுக்கு சிலை எடுத்தே சம்பாதித்துவிடுவார்கள். இவர்களை யாராவது திட்டினால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதே நேரம் யானையைப் போல மனதில் வைத்துக்கொண்டு மறக்கமாட்டார்கள். இவர்களிடம் ஞாபகசக்தி அதிகம். இவர்களுக்கு ஒரே ஒரு அறிவுரையை சொல்லியாக வேண்டும்.  இவர்களுக்கு யாரையாவது பிடித்துவிட்டால் அவர்களுடன் மிக அதிகமான நட்பு கொண்டுவிடுவார்கள். அதே நேரம் அவர்களால் இடையூறு ஏற்பட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதுபோல விரக்தியின் உச்சத்திற்கு சென்றுவிடுவார்கள். இவ்வாறு செய்யாமல் நண்பர்களை பொறுத்தவரை அளவோடு இருந்து கொண்டால் வாழ்க்கையில் முன்னேறுவதை யாராலும் தடுக்கமுடியாது. ஆடி மாதத்தில் பிறந்த பெண்களால் பெற்றோர்கள் மகிழ்ச்சி குறைந்தே இருப்பார்கள். எனவே இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் பெற்றவர்கள் மனம் கோணாமல் நடக்க முயற்சி செய்தால், வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறி விடுவார்கள்.

ஆவணியில் பிறந்தவர்கள் சுதந்திரமான தொழிலில் இருக்க விரும்புவார்கள். பெருந்தன்மையான குணம் கொண்ட இவர்கள் புகழோடு வாழ காரியங்களை சாதிப்பவர்களாக இருப்பார்கள். எதையும் உடனடியாக செய்து முடித்துவிட வேண்டும் என்ற குணமுடையவர்கள். இதன் காரணமாக இவர்களிடம் பிடிவாத குணமும் இயற்கையாகவே அமைந்திருக்கும். இவர்கள் செய்வது மட்டுமே சரி, மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு என்ற எண்ணம் படைத்தவர்களாக இருப்பார்கள். இதனால் மற்றவர்களின் பழிச்சொல்லுக்கு ஆளாவார்கள். இந்த மாதத்தில் பிறந்த கடைக்குட்டி குழந்தைகளின் பேச்சுக்கு குடும்பத்தில் மதிப்பு இருக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஜாதகத்தை பார்த்து இவர்கள் பிறந்த சிம்ம ஸ்தானத்தில் இருந்து சூரியனின் இருப்பைப் பொறுத்து எந்த அளவுக்கு கவுரவமாக வாழலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் பெரும் செல்வந்தர்களாக மாறுவார்கள். ஏனெனில் இந்த மாதங்களில் பிறந்தவர்களின் கொள்கைகள் ஒரே மாதிரியாக இருக்கும். இவர்களிடம் நிதான புத்தி இருக்கும் அளவிற்கு அவசரமும் இருக்கும் என்பதால் சில காரியங்களில் தடுமாற்றம் ஏற்படும். எனவே அவசர குணத்தை மட்டும் விட்டுவிட்டால் நல்லது. இவர்களிடம் சிக்கனம் அதிகம். அதேநேரம் வீட்டிற்கு வந்தவர்களை நல்லபடியாக உபசரிப்பார்கள். இவர்களின் உபசரிப்பை பொறுத்தே உறவினர்களும் நண்பர்களும் இவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடுவார்கள். இவர்களுக்கு கடன் வாங்குவது பிடிக்காது. அதுபோல கடன் கொடுக்கவும் பிடிக்காது. யாரிடமாவது கடன் வாங்கும் நிலைமை ஏற்பட்டால் அதற்கு பதிலாக ஏதாவது கடன் கொடுத்த நபருக்கு உபகாரம் செய்துவிட முயற்சி செய்வார்கள். அதிகாரம் செய்யும் சுபாவம் இவர்களிடம் அதிகம். இவர்களுக்கு ஏற்ற மனைவி அமைவது மிகவும் கடினம். இதன் காரணமாக வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டதாக கருதி மனம் உடைந்து போவார்கள்.  எனவே திருமணத்தின்போது தகுந்த மணமகளையோ, மணமகனையோ தேடிக்கொள்வது நல்லது. ஆரம்பகாலத்தில் நாத்திகராக இருக்கும் இவர்கள் காலப்போக்கில் மிகப்பெரிய ஆத்திகராக மாறிவிடும் சூழல் ஏற்படும்.

புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் பெரும் செல்வத்துடன் வாழ பிறந்தவர்கள். இவர்கள் முதல் போடாமலே சம்பாதிக்கும் வலிமை படைத்தவர்கள். இவர்களின் எதிர்பாராத முன்னேற்றத்தால் மற்றவர்கள் இவர்களைக் கண்டு பொறாமைப்படுவதுண்டு. இவர்களுக்கு தொழில் ரீதியாக பின்னால் என்ன நடக்கும் என்பதை கிரகிக்கும் சக்தி உண்டு. எனவே தொழில் மற்றும் வியாபாரத்தில் இவர்களை வெற்றிகொள்ள யாராலும் முடியாது. கல்வியிலும் இவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. அறிவியல் துறையில் ஈடுபட்டால் இவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புத்தகம் படிப்பதில் இவர்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்கும். யாராவது தவறு செய்தால் அவர்களை தட்டிக்கேட்கும் குணம் இவர்களிடம் உண்டு. அத்துடன் திரும்பவும் அந்த தவறை செய்யாமல் இவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இயற்கை எழில் மிகுந்த இடங்களுக்கு சென்று வருவதிலும் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்களிடம் சில குறைகளும் உண்டு.  இயற்கையாகவே இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகம் இருந்தும்கூட ஒரு லட்சியத்தை மேற்கொண்டு அதை நிறைவேற்ற வேண்டுமென நினைக்கமாட்டார்கள். இவர்களுக்குரிய திறமை இவர்களுக்கே தெரியாமல் போய்விடுவது தான் பெரிய குறையாகும். இவர்கள் சந்தேக மனப்பான்மை மிக்கவர்களாக இருப்பார்கள். இப்போதைக்கு கிடைத்ததுபோதும் என்ற எண்ணமே அதிகமாக இருக்கும். எனவே பின்னால் வரப்போகும் பெரிய லாபத்தை விட்டுவிடுவார்கள்.  இதையெல்லாம் தவிர்த்து ஒரு லட்சியத்துடன் வாழ்ந்தால் இந்த மாதத்தில் பிறந்தவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். இவர்களுக்கு கண்ட கண்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதில் விருப்பம் அதிகம். இதைத் தவிர்த்து சத்துள்ள உணவை அளவோடு சாப்பிட்டால் இவர்களது ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்களை கணவன்மாருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இவர்கள் தங்கள் கணவன் வீட்டு வேலை உட்பட அனைத்தும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் குறும்புத்தனம் அதிகமாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்களில் பலருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும். எனவே தக்க பரிகாரம் செய்து இவர்களை திருமணம் செய்து கொடுக்கலாம்.

ஐப்பசி மாதத்தில் பிறந்த ஆண்களும், பெண்களும் எந்த காரியத்திலும் வல்லவர்கள். இந்த மாதத்தில்தான் ராஜராஜசோழன் பிறந்தான். அவர் கட்டிய தஞ்சை கோயில் காலத்தால் அழியாத ஒன்று. அவரைப் போலவே இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெரிய திட்டமாகவே போடுவார்கள். இதனாலேயே இவர்கள் அரசியல்வாதிகளாக ஆவதற்கு தகுதி கொண்டவர்கள். இவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். பெண்களிடம் பழகுவதில் இவர்களைப் போல் வல்லவர்களை காணமுடியாது. ஐப்பசி மாதத்தில் பிறந்த ஆண்களின் நட்பை பெண்களும் விரும்புவார்கள். இவர்களிடம் பொறுமை அதிகம். உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் உண்டு. இவர்களில் சைவத்தை ஏற்றுக் கொண்டவர்கள்கூட அசைவம் சாப்பிட வேண்டும் என விரும்புவார்கள். பிறரது தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதில் இவர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். இவர்களிடம் உணர்ச்சிவசப்படும் பழக்கம் அதிகம். பிறர் முன்னிலையில் கவுரவமாக வாழவேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் மனைவிக்கு பயப்படமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு மூத்த சகோதரர்கள் இருப்பது அபூர்வமான ஒன்றாகும். நீதித்துறையில் நுழைந்தால் இவர்கள் ஜொலிப்பார்கள்.இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எந்த வேலையையும் தாமதமாகவே செய்வார்கள். தெய்வபக்தி அதிகமாக இருந்தாலும் இவர்களிடம் கர்வமும் அதிகமாக இருக்கும். கல்லூரிக்கு சென்று படிக்காவிட்டாலும் சாதாரண கல்வி அறிவு உள்ளவர்கள்கூட ஏதாவது வேலை செய்து வாழ்க்கையை நடத்தவேண்டும் என எண்ணுவார்கள்.  இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு நகைகள், உடைகள் மீது ஆர்வம் அதிகம். ஆனால் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளால் வாழ்நாள் முழுவதும் சிரமம் இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் நடந்துவிடும். அவ்வாறு நடக்காவிட்டால் மிகவும் தாமதமாகிவிடும்.

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் பயந்த சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் அந்த பயத்தைப் போக்கி துடிப்புள்ளவர்களாக விளங்க இவர்கள் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணாமலையாரை வணங்க வேண்டும். இவர்கள் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு எதிர்காலத்தை வகுத்துக் கொள்ளும் வல்லமை உடையவர்கள். எனவே இவர்கள் செய்யும் செயல்கள் நல்லதாகவே அமையும். ஜோதிடம் கற்றுக்கொள்ளும் தகுதி இவர்களிடம் உண்டு. இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளின் காதுகளை டாக்டரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. கார்த்திகை இடியும் மின்னலும் உடைய மாதம் ஆதலால் இந்த சத்தத்தைக் கேட்டு குழந்தைகளின் காதுகள் பாதிக்கப்படலாம் என கூறுவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் இளமையிலேயே பல சோதனைகளை சந்திப்பார்கள். அந்த சோதனைகளால் ஆத்திரம் ஏற்பட்டு செய்யக்கூடாத செயல்களை செய்து விடுவதும் உண்டு. எனவே பொறுமையுடன் இருப்பது மிகவும் நல்லது. இவர்கள் இயற்கையிலேயே தாகம் உடையவர்களாக இருப்பார்கள். ஆத்திரக்காரர்களாக இருப்பதால் இவர்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டு அடிக்கடி கோயிலுக்கு செல்வார்கள். இப்படியே சென்றுகொண்டிருக்கும் இவர்கள் பெரும் பக்தர்களாக மாறி ஞான மார்க்கத்திற்கே சென்றுவிடுவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களின் நிலை சிறப்பாக இருக்கும். முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களுக்குரிய மாதம் இது. எனவே முருகனை இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் வணங்கிவந்தால் சகல சவுபாக்கியங்களுடன் விளங்குவார்கள். இவர்கள் குழந்தையைப் போல மற்றவர்களிடம் பழகுவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களை திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு சகல பாக்கியங்களும் உண்டாகும். இந்த பெண்கள் பெரியவர்களிடம் மரியாதையாக நடப்பார்கள். விரதங்கள், தானம், தர்மம் செய்வதில் வல்லவர்கள். இந்த பெண்களுக்கு எதிரிகள் இருக்க வாய்ப்பில்லை. இவர்கள் ஏராளமாக செலவு செய்வார்கள். இதனால் கணவன் மனைவி இடையே சிறு மனஸ்தாபங்கள் வரலாம். இதைத் தவிர்த்துவிட்டால் இந்தப் பெண்களை அசைக்க யாராலும் முடியாது. இவர்களுக்கு அரசு துறைகளில் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம். லாட்டரி விஷயத்தில் ஆர்வம் கூடுதலாக இருக்கும். இதையும் இவர்கள் தவிர்க்க வேண்டும்.

குளிர்ந்த மாதமான மார்கழியில் பிறந்தவர்கள் எந்த விஷயத்திலும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள். ஒரு காரியத்தை துவங்கினால் அதை முடிக்காமல் தூங்க மாட்டார்கள். இவர்களுக்கு அரசியல், ஆன்மிகம், தத்துவம், அரசு பணிகளில் நிர்வாகம் போன்ற உயர்பணிகள் ஏற்றவை. இதில் ஈடுபட்டால் இவர்களால் செல்வத்தை குவிக்கமுடியும்.  ஆடம்பரத்தில் இவர்கள் விருப்பம் கொண்டவர்கள். சம்பாத்தியம் குறைவாக இருந்தாலும் அதிகமாக செலவழிக்க வேண்டும் என விரும்புவார்கள். இதன் காரணமாக இவர்கள் வாழ்க்கையின் பின்பகுதியில் சிரமப்படுவார்கள். எனவே இவர்கள் இந்த குணத்தை மாற்றிக்கொண்டு எதிர்காலத்தைப் பற்றி யோசித்து நடந்து கொள்ள வேண்டும். இவர்கள் ஒரு சைக்கிளில் சென்றால்கூட வேகமாக செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதே நேரம் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தால் அப்படியே இடிந்து போவார்கள்.  இந்த நேரத்தில் இறைவனை வணங்கி அமைதியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். சிறந்த எழுத்தாளர்களாகவும் இவர்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் முக்கியமான எதைப்பற்றியாவது எழுதினால் அது உலகின் தலைவிதியையே மாற்றும் தன்மை கொண்டதாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு கெட்ட சிநேகிதங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கெட்டவர்களுடன் சேர்ந்து மோசமான உணர்ச்சிகளுக்கு அடிமைப்படும் வாய்ப்பு அதிகம்.  இதற்காக பின்னால் மிகவும் வருத்தப்படுவார்கள். அதே நேரம் படிப்பில் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். இவர்களுக்கு திருமணத்தில் அதிக விருப்பம் இருக்காது. அதேநேரம் ஆண்கள் பெண் நண்பர்களுடனும், பெண்கள் ஆண் நண்பர்களுடனும் வாழ்வதற்கு பிரியப்படுவார்கள். மொத்தத்தில் சுதந்திரமான வாழ்க்கையை இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் விரும்புவர். எனவே பொருத்தமான வாழ்க்கை துணையை தேடிக்கொண்டால் வாழ்க்கை இனிமையாக அமையும்.

தை மாதத்தில் பிறந்தவர்கள் கஞ்சத்தனம் உடையவர்கள். ஒருவருக்கு பத்து காசு செலவழித்தால் தனக்கு பத்து ரூபாய் வருமானம் வருமா என பார்த்து செலவு செய்வார்கள். கடமையில் கெட்டிக்காரர்கள். உயர் அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு பணம் கொடுத்தாவது காரியத்தை சாதித்துக் கொண்டு விடுவார்கள். இதன்மூலம் ஏராளமான வருமானம் பெறுவார்கள். தை மாதத்தில் பிறந்தவர்களை நம்பி மற்றவர்கள் எந்தக் காரியத்திலும் இறங்கக்கூடாது. இவர்களுக்கு விவசாயம் மற்றும் மனைகள் வாங்கி விற்பது ஏற்ற தொழிலாக இருக்கும். இந்த மாதமே விவசாய மாதம் என்பதால் இவர்கள் முழுமையாக விவசாயத்தில் ஈடுபடுவது பெரும் லாபம் தரும். அதே நேரம் இவர்கள் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்பட்டால் வெற்றிகள் பெருகும்.  இவர்கள் ஒரு அழகிய அல்லது பயனுள்ள பொருளைப் பார்த்தால் அந்தப் பொருளைவிட அதை செய்தவரையே பாராட்டுவார்கள். அப்படிப்பட்டவர்களை சென்று பார்த்து தாங்களும் அந்த தொழிலில் இறங்கினால் என்ன என்று நினைப்பவர்கள். தை மாதத்தில் பிறந்த பெண்கள் அழகாக இருப்பார்கள். வயதான காலத்தில் கூட மேக்கப் போட விருப்பப்படுவர். மற்ற பெண்களுடன் நெருங்கிப் பழகமாட்டார்கள். இவர்களுக்கு உடன் பிறந்தவர்கள் இருப்பது அபூர்வமான விஷயம். திருமணமான பிறகு கணவர் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று யோசிப்பதைவிட தனது பொறுப்பில் எவ்வளவு உள்ளது என்று கணக்குப்போடும் குணம் இவர்களிடம் உண்டு.  காதல் விஷயத்தில் இவர்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. காதல் திருமணம் இவர்களுக்கு ஒத்துவராது. குழந்தைகளை வளர்க்க தை மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வார்கள். அவர்களது முன்னேற்றத்தில் மிக மிக கவனமாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு செல்லம் கொடுப்பதில்லை. இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு திரும்பத்திரும்ப விஷயங்களை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் என்ன சொன்னாலும் தங்கள் இஷ்டம் போலவே நடந்து கொள்வார்கள். அதே நேரம் படிப்பிலும் விளையாட்டிலும் குழந்தைகள் அதிக கவனம் செலுத்துவார்கள்.

மாசி மாதத்தில் பிறந்தவர்கள் முன்கோபக்காரர்கள். குழந்தைகள் அதிகம் பிறக்காது. இவர்களிடம் யாராவது உண்மையை மறைத்தால் அதை அறிந்துகொள்ளும் வல்லமை உடையவர்கள். விஞ்ஞானத்தில் ஆர்வம் உண்டு. எதை எந்த வேளையில் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை அறிந்து திட்டமிட்டு காரியம் செய்யக்கூடியவர்கள். இவர்களில் சிலர் பிறந்த ஊரில் சிலகாலம் தான் இருப்பார்கள். பின்பு பிழைப்புக்காக பல்வேறு இடங்களுக்கும் சென்று விடுவார்கள். கஷ்டப்பட்டு பொருள் சம்பாதிப்பார்கள். இவர்கள் தங்களைத் தாங்களே அழகில் சிறந்தவர்களாக எண்ணிக்கொண்டு கர்வத்துடன் நடப்பார்கள். இந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் காதல் திருமணத்தில் ஆர்வம் உள்ளவர்கள். புகுந்த வீட்டில் இவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். கணவனை கைக்குள் வைத்திருப்பார்கள். இவர்கள் அனைவருடனும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர்கள். எனவே ஏராளமான நண்பர்கள் கிடைப்பார்கள். உறவினர்களை நேசிப்பார்கள்.  அடிக்கடி வீட்டிற்கு உறவினர்களும் நண்பர்களும் வருவார்கள் என்பதால் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும் ஆடம்பர பொருட்களை வாங்கவும் ஆசைப்படுவார்கள். இதனால் அதிகச் செலவுகள் ஏற்படும். இதைத் தவிர்த்து தங்கள் வருமானத்திற்கு ஏற்றவகையில் பொருட்களை வாங்கிக் கொள்வது எதிர்கால சேமிப்புக்கு உதவும். தங்கள் இஷ்டப்படிதான் எதுவும் நடக்க வேண்டும் என்ற கொள்கையிலிருந்து இவர்கள் மாறுபட்டவர்கள். அடுத்தவர்களை அனுசரித்து செல்வார்கள். தொழிலில் அதிக அக்கறை காட்டும் குணம் இவர்களிடம் உண்டு.  இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வெங்கடாசலபதியையும், பத்ரகாளியையும் வணங்கிவந்தால் இவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் விலகும். இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளிடமும் புத்திசாலித்தனமும் ஆரோக்கியமும் உண்டு. கல்வியில் ஆர்வம் இருக்கும். தங்களுக்கு சம அந்தஸ்தில் உள்ள குழந்தைகளிடமே பழகுவர்.

பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியவர்கள். இவர்கள் விரைவில் போதைப்பழக்கத்திற்கு ஆளாகிவிடுவார்கள். அதிகமான மனக்கஷ்டங்கள் ஏற்படும் என்பதால் இந்த பழக்கம் உருவாக வாய்ப்புண்டு.  எனவே போதைக்கு அடிமையாகாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் திரைப்படத் தொழிலுக்கு ஏற்றவர்கள். சிற்பக்கலையிலும் ஆர்வம் உண்டு. இயற்கைக் காட்சிகளை ரசிப்பார்கள்.  கலையை தெய்வமாக கருதி வழிபடுவார்கள். முன்கோபம் அதிகமாக வரும். தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு உழைப்பை மறந்துவிடும் குணமுண்டு. தெய்வ பக்தி அவசியமே எனினும் செய்யும் தொழிலே தெய்வம் என்பதையும் இவர்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் படபடப்புடன் பேசுவார்கள். நாகரீகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. சினிமா கவர்ச்சி அதிகம். எனவே இவர்கள் ஏமாந்து போகும் நிலையும் வரலாம். கலைத்துறைக்கு செல்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.  இந்த பெண்களில் சிலர் இளவயதில் வறுமையில் வாடும் வாய்ப்பு உண்டு. இவர்களில் பலருக்கு பெண்குழந்தைகளே பிறக்கும். எழுத்து தொழிலுக்கு இவர்கள் ஏற்றவர்கள். எப்போதும் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். சுற்றிவளைத்துப் பேசும் குணமுடையவர்கள். எதிலும் முன்ஜாக்கிரதையாக இருப்பார்கள். மற்றவர்கள் இவர்களை பாராட்டி பேசினால் அதில் மயங்கி விடுவார்கள். ஆன்மிகத் துறையில் ஈடுபட்டால் இவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பசிதாங்கும் சக்தி இவர்களிடம் அதிகம். பங்குனியில் பிறந்த குழந்தைகளிடம் பொய்சொல்லும் வழக்கம் அதிகமாக இருக்கும். பெற்றோருக்கு கட்டுப்படாமல் தங்கள் இஷ்டப்படி நடப்பார்கள்.  இந்த குழந்தைகளை வளர்ப்பதில் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும். இவர்களுக்கு சிறு வயதிலேயே தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது நல்லது.