Tuesday 30 April 2013

சித்திரா பவுர்ணமி பூஜை செய்யும் முறை


காலையில் எழுந்த உடன் குளித்து விட்டு சுத்தமான ஆடை அணிந்து கொண்டு பூஜை அறையை சுத்தம் செய்து ஒரு பலகை மேல் கலசம் வைத்து, அதற்கு முன்பு வண்ணக் கோலம் குழந்தை போன்று வரைந்து, அதற்கு கையில் புத்தகம், எழுத்தாணி இருப்பதும் போன்று இருக்க வேண்டும். 

பூஜைப் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு உப்பைத் தவிர்த்து, பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் சேர்க்காமல் பகலில் உணவு உண்டு எளிய பூஜையை செய்ய வேண்டும். பூஜையின் போது, பசுத் தயிர் இல்லாமல் எருமைத் தயிர் மட்டும் சேர்க்க வேண்டும். 

ஒரு முறத்தில் அரிசி, காய்கறி, தாம்பூலம், முடிந்த அளவு காசுகள், எழுது பொருட்களான பேனா, பென்சில், நோட்டு புத்தகம், 7 வயதுக்குள்ளான ஒரு குழந்தைக்கு தானம் செய்ய வேண்டும். 

பூஜை சமயத்தில் வீட்டிலுள்ள குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும். வீட்டிலுள்ள பெரியவர்கள் நோய் தீர வேண்டும். ஆயுள் வளர வேண்டும் என்ற வேண்டுதலை செய்து அர்ச்சணையை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment