Tuesday 30 April 2013

புத்தாண்டு அன்று காலையில் எதன் முகத்தில் விழிக்க வேண்டும்?


புது வருடப்பிறப்பு என்றாலே எல்லோருக்கும் மனதிற்குள் உற்சாகமும், சந்தோஷமும் பொங்கி எழும். அப்படிப்பட்ட புத்தாண்டு நாளில் நாம் அதிகாலையில் கண்விழித்தவுடன் முதலில் இறைவனின் திருவுருவப் படங்களைப் பார்ப்பது அந்த வருடத்தின் அனைத்து நாட்களிலும் நமக்கு நற்பலன்களைத் தரும் விதத்தில் அமையும். 

பொதுவாகவே காலையில் எழுந்தவுடன் நமது உள்ளங்கையைப் பார்த்து வழிபட வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. இதற்கு காரணம் நமது விரல் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், கரங்களின் அடிப்பகுதியில் வீரத்தை வழங்கும் துர்க்கையும் குடி கொண்டிருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. 

ஆகவே கல்வி, செல்வம், வீரம் மூன்றுக்கும் அதிதேவதைகள் வீற்றிருக்கும் உள்ளங்கையை தரிசித்தால் அன்று முழுவதும் நல்ல சம்பவங்கள் நடைபெறும். மேலும் வலம்புரிச்சங்கு வைத்திருப்பவர்கள் அதில் காசுகளைப் பரப்பி வைத்து அதன் முகத்தில் விழிக்கலாம். 

கண்ணாடி, தண்ணீர், ஆலய கோபுரம் போன்றவற்றையும் எழுந்தவுடன் பார்ப்பது நல்லது. பூஜையறையில் கனிகளைப் பரப்பி வைத்து அவற்றின் முகத்தில் விழித்தாலும் கனிவான வாழ்க்கை அமையும். சான்றோர்களின் வாழ்த்துக்களைப் பெறுவதும் நல்லது.

No comments:

Post a Comment